திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்)
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.பெருமாளை திருக்கண் பள்ளி உணர்த்த அல்லது திருக்கண் மலர செய்ய, ஆழ்வார் வேண்டிய பாடல்கள் ஆனதால், இதற்கு திருப்பள்ளியெழுச்சி என்ற பெயர். வேறு எந்த பிரபந்தத்திற்கும் இல்லாத பெருமையாக, நேரடியாக ஒரு காரியத்தை கொண்டு தலைப்பு பெற்ற பிரபந்தம் ஆகும்.
ஆசிரியர்
வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் (இயற்பெயர்: விப்ரநாராயணர்).
திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை
திருமாலைக்கு உரையெழுதிய நஞ்ஜீயர் தான் எழுதிய திருமாலைக்கான உரையில், உலக இன்பங்களில் உழன்று கிடந்த ஆழ்வாரை, அரங்கன் விழிப்பித்தான். அரங்கனைக் காணவந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னைக் கண் திறந்து பாராமல், யோக நித்திரையில் இருக்கும் அரங்கனைக் கண் விழிக்கச் செய்வதற்காக இயற்றியது திருப்பள்ளியெழுச்சி. பின்பு திருப்பள்ளியெழுச்சியில் ஆழ்வார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிபொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும் எனச் சொல்கிறார்
நூல் அமைப்பு
திருப்பள்ளியெழுச்சி பத்து ஆசிரியப்பாக்களால் ஆன பதிகம். திருமலைஆண்டான் வடமொழியிலும், திருவரங்கப் பெருமாள் அரையர் தமிழிலும் இரு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே எனபதை ஈற்றடியாகக் (கடைசி அடி)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.