க. வைத்தியலிங்கம்
From Tamil Wiki
Revision as of 19:30, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
To read the article in English: K. Vaithiyalingam.
க. வைத்தியலிங்கம் (19 - 20-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். நாணிக்கண்புதைத்தல் என்ற துறையை அடிப்படையாகக் கொண்டு பாடிய வண்ணை வைத்தீசர் ஒரு துறைக் கோவை முக்கியமான படைப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் க. வைத்தியலிங்கம் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
வண்ணை வைத்தீஸ்வரரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு வண்ணை வைத்தீசர் ஒரு துறைக் கோவை நூல் பாடினார். 1913இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. நாணிக்கண்புதத்தல் என்ற துறையை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டது.
நூல்கள் பட்டியல்
- வண்ணை வைத்தீசர் ஒரு துறைக் கோவை (1913)
- தோத்திர மஞ்சரி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page