being created

க. வெள்ளைவாரணர்

From Tamil Wiki
Revision as of 05:13, 24 December 2022 by Tamizhkalai (talk | contribs)

க. வெள்ளைவாரணர் (ஜனவரி, 14, 1917 -ஜூன் 13,1988) தமிழிறிழர், உரையாசிரியர், ஆராய்ச்சியாளர், தமிழிசை அறிஞர், யாழ் நூலின் உருவாக்கத்தில் விபுலானந்தருக்கு துணையாக இருந்தவர்.

பிறப்பு, கல்வி

வெள்ளிவாரணர் திருநாகேசுவரத்தில் கந்தசாமி – அமிர்தம் அம்மையார் தம்பதியினருக்கு மகனாக ஜனவரி, 14, 1917 அன்று பிறந்தார். தம் பள்ளிக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்றார். பின்னர் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் சேர்ந்து திருமுறைகளை இசையோடு பாடக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935ல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, ‘தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு’ என்னும் ஆய்வேட்டினை அளித்தார்.

தனி வாழ்க்கை

1939-ல் பொற்றடங்கண்ணியை மணந்தார்.

தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1943 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவரது புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக் கழகம் இவருக்கு இணைப் பேராசிரியர் பதவி வழங்கியது. தமிழ்த்துறைத் தலைவராக 1977-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 1979 முதல் 1982 ஆம் ஆண்டுவரை சிறப்புப் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.