first review completed

ஆதலையூர் சூரியகுமார்

From Tamil Wiki
Revision as of 08:12, 9 February 2022 by Jeyamohan (talk | contribs)
ஆதலையூர் சூரியகுமார்

ஆதலையூர் சூரியகுமார் எழுத்தாளர், ஆசிரியர், சுயமுன்னேற்ற -ஆன்மிகச் சொற்பொழிவாளர், ஆய்வாளர், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளராக உள்ளார்.

பிறப்பு, கல்வி

வரலாறில் இளங்கலை, முதுகலை, தமிழில் முதுகலை, கல்வியியலில் முதுகலை பட்டங்களையும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்.

தனிவாழ்க்கை   

ஆதலையூர் சூரியகுமாரின் மனைவி பெயர் ரேணுகா. இவரும் எழுத்தாளர். ‘இனி ஒரு கல்வி செய்வோம்’, ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ ஆகிய புத்தகத்தை எழுதியுள்ளார்.இத்தம்பதியினருக்கு இரண்டு பெண்குழந்தைகள். திருவாரூர் மாவட்டம் தென்குவளைவேலி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அசிரியராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஆதலையூர் சூரியகுமார்

தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறள் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது அதற்கு ஏழு சிறப்புக் கையேடுகளை ஆதலையூர் சூரியகுமார் தயாரித்தார். அவை ‘திருக்குறள் நன்னெறி நூல்கள்’ (7 தொகுதிகள்) என்ற தலைப்பில் வெளிவந்தன. இந்தத் தொகுப்பு நூலுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது (2017) வழங்கியது. கரிகால் சோழனை மக்கள்பணி செய்த தலைவனாகச் சித்தரிக்கும் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நாவலை எழுதியிருக்கிறார்

ஆதலையூர் சூரியகுமார்
கரிகாலன் சபதம்

இலக்கிய இடம்

சிறப்புகள்

  • உலகின் முதல் நீண்ட நாவலான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவலுக்குத்தான் இசை வௌியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ என்ற நாவலுக்கும் இசை வெளியிடப்பட்டது.
  • ‘கரிகாலன் சபதம்’ நாவலைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. அதற்கு இவர் திரைக்கதையும் எழுதியுள்ளார். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
  • இவர் எழுதிய ‘காற்றில் அலையும் செய்திகள்’ என்ற கவிதை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • தி இந்து தமிழ், தினமலர், தினகரன் ஆகிய நாளிதழ்களில் அறிவியல் தொடர் எழுதியுள்ளார்.
  • செனட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் இருப்பார்கள்.  மூன்றாவது வகை உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் நாமினேட்டட் மெம்பர்ஸ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பு வகிக்கும் மேதகு ஆளுநர் தன்னுடைய பிரதிநிதியாகச் சில உறுப்பினர்களை நியமிப்பார். கல்வி, கலை, இலக்கியம், எழுத்து, மாணவர் மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களைத் தன்னுடைய பிரதிநிதியாக ஆளுநர் நியமிக்கிறார். இவர்கள் நாமினேட்டட் மெம்மபர்ஸ். ஆளுநரின் நேரடி நியமனம் என்பதால், இந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில்தான் இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டார். இவர் ஏப்ரல் 09, 2019 முதல் ஏப்ரல் 08, 2022 வரை அந்தப் பதவியில் இருப்பார். பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புக்கு ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

பரிசுகள்

ஆதலையூர் சூரியகுமார்
  • ஆனந்த விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000 /- (1995)
  • தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 15,000/- (2011)
  • தினமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000/- (2019)
  • வானதி மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000/- (2017)
  • குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3000/- (2018)
  • இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டு முறை மூன்றாம் பரிசு (2018, 2019)
  • கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு
  • தினமணி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் 5 முறை பரிசு
  • குமுதம் நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (1997)

விருதுகள்

  • திருப்பூர் ரோட்டரி கிளப் வழங்கிய சிறந்த தொழிற்கல்வி விருது - 2007
  • சென்னை பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் வழங்கிய சிறந்த தமிழ் ஆசிரியருக்கான விருது - 2007
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த கவிஞருக்கான விருது - 2008
  • தினமலர் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருது - 2014
  • தமிழக அரசு வழங்கிய கனவு ஆசிரியர் விருது - 2017
  • சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது - 2017
  • புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கிய புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
  • சிறந்த ஆசிரியருக்கான மதுரை மாவட்ட ஆட்சியர் விருது - 2017
  • தி இந்து தமிழ் நாளிதழ் வழங்கிய அன்பாசிரியர் விருது - 2020

நூல்கள்

நாவல்கள்
  • நீர் தேடும் நெஞ்சங்கள் - 2019
  • பாராசூட் பறவைகள் - 2020
  • கரிகாலன் சபதம் - 2020
  • வானம் தொடங்கும் இடம் - 2020
சிறுகதைத் தொகுப்புகள்
  • பச்சை விளக்கு எரிகிறது - 2019
  • கல் தேசம் - 2010
கவிதைத் தொகுப்புகள்
  • தொடர்பு எல்லைக்கு வெளியே - 2008 (திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது)
  • காற்றில் அலையும் செய்திகள் - 2019
தன்னம்பிக்கை நூல்கள்
  • மலருங்கள் மாணவர்களே - 2007
  • வரலாம் வா, நண்பா!
பயண நூல்கள்
  • குகைக்குள் தெரிந்த வெளிச்சம் - 2006
  • தூர தேசத்தில் துருவப் பறவைகள் - 2007
அறிவியல் நூல்
  • செல்பி வித் சயின்ஸ் -2019 (இலக்கிய பீடம் பரிசு பெற்றது)
தல வரலாறு
  • அருள்மிகு பீமேஸ்வரர் சுவாமி - 2011
பிறவகை நூல்கள்
  • ஆடுவோம்! பாடுவோம்! படிப்போம்! - 2012
  • திருக்குறள் நன்னெறி நூல்கள் (7 தொகுதிகள்) - 2017
  • ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழிகாட்டி நூல்கள் (7 தொகுதிகள்) -2013
  • கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல் -2014
  • தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.