முதற்கனல் (வெண்முரசு நாவலின் முதற்பகுதி)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
முதற்கனல் வெண்முரசு நாவலின் முதற்பகுதி. அஸ்தினபுரியின் அரசனாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காகக் காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும் பீஷ்மரை அம்பை சபிப்பதும் அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும் அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் இந்த முதற்கனலில் இடம்பெறுகின்றன.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனலை எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் ஜனவரி 1, 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு பிப்ரவரி 2024இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனலை நற்றிணை பதிப்பகம் 2014இல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
‘முதற்கனல்’ ஜனமேஜயனின் சர்ப்ப சத்ர வேள்வியில் தொடங்கி வியாசர் எழுதியுள்ள ‘ஸ்ரீஜெய’ எனும் காவியம் வழியாகப் பயணிக்கிறது. சந்தனுவின் மரணம், விசித்திரவீரியனுக்காகப் பீஷ்மர் காசி இளவரசியர் மூவரையும் கவர்ந்து வருவது, பேரன்பு கசந்து கொற்றவையாகி காடேகும் அம்பை. விசித்திரவீரியனின் மரணம், அம்பிகை அவன் மீது கொண்ட காதல், வியாசரின் உதவியுடன் நியோக முறையில் அம்பிகையும் அம்பாலிகையும் கர்ப்பம் தரித்தல், அம்பை தீ புகுதல், சிகண்டியின் எழுச்சி என்று நிறைவுகொள்கிறது இந்த ‘முதற்கனல்’.
கதை மாந்தர்
சத்தியவதி, பீஷ்மர், வியாசர், அம்பை, அம்பாலிகை, விசித்திரவீரியன், சிகண்டி ஆகியோர் இந்த முதற்கனலின் முதன்மை மாந்தர்கள்.
உருவாக்கம்
‘முதற்கனல்’ ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்தவரும் ஆஸ்திகன் தன அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சும் இடத்தோடு முடிகிறது.
நூல் பின்புலம்
‘முதற்கனல்’ என்பது மாபெரும் அழிவின் முதல் பொறி. ஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும் முதற்கனல். அது அம்பையுடையது என்றல்ல, அதற்கும் முன்னால் கைகூப்பி உதிரம் வடிந்து அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று மடிந்த சுனந்தையின் கனல்.
இலக்கிய இடம் / மதிப்பீடு
மொழியாக்கம்
பிற வடிவங்கள்
உசாத்துணை
https://venmurasu.in/mutharkanal/chapter-1
https://venmurasudiscussions.blogspot.com/
[[Category:Tamil Content]]