being created

பகழிக் கூத்தர்

From Tamil Wiki
Revision as of 06:09, 29 November 2022 by Tamizhkalai (talk | contribs)

பகழிக் கூத்தர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு. இன்றும் சில முருகன் ஆலயங்களில் திருப்புகழ் ஓதியபின் இறுதியில் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது.. இலங்கையில் வீட்டுக்குப் பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலைத் திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து வழிபாடு செய்த பின்னர்த் தான் கட்டட வேலைகளை துவங்கின என்று கூறப்படுகிறது.

பிறப்பு, இளமை

பகழிக் கூத்தர் இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதிகளின் ஆட்சிக்கு உட்பட்ட செம்பியநாடு என்னும் பகுதியில் திருப்புல்லாணிக்கு அருகே வீர நாராயண சதுர்வேதி மங்கலம் (சன்னாசி என்றும் அழைக்கப்படும்) என்ற கிராமத்தில் தர்ப்பாதனர் என்னும் வைணவருக்கு 15-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். பகழிக் கூத்தர் என்னும் சித்தரின் அருளினால் பிறந்தவராதலால் அப்பெர்யரையே பெற்றோர் மகனுக்குச் சூட்டினர். பகழிக்கூத்தர் இளம் வயதிலேயே தமிழ் இலக்கணம், இலக்கியம், வேதம் மற்றும் புராணங்களில் பயிற்சி பெற்றார்.இளம் வயதிலேயே வரகவியாகவும் சேது சமஸ்தான அரசரரின் மதிப்பிற்குரியவராகவும் திகழ்ந்தார். பகழிக்கூத்தர் சீவ சிந்தாமணியை விரும்பிக் கற்றுத் தேர்ந்து, 'சீவக சிந்தாமணி சுருக்கம்' என்னும் 300 விருத்தப் பாக்களால் ஆன நூலை இயற்றினார் அந்த நூலில் 'செம்பி நாட்டு வீர நாராயண சதுர்வேத மங்கலம் விளக்க வந்த வேதியர் குலாதிபதி தர்ப்பாதனன் புதல்வன் மிக்க பகழிக் கூத்தனே தன் புதல்வன்' என்ற முத்திரை வரிகள் இவரைப் பற்றி அறிய உதவின.




உசாத்துணை

கௌமாரம்-திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.