டி. ராமகிருஷ்ண பிள்ளை
From Tamil Wiki
Revision as of 12:09, 19 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved template to bottom of article)
டி. ராமகிருஷ்ண பிள்ளை (தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை; 1854-1920) ஆங்கிலத்தில் வரலாற்று நாவல் எழுதிய முதல் தமிழர். ராயல் ஹிஸ்டரிகல் சொசைட்டியின் உறுப்பினர். பல மொழிகள் அறிந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாஷியாகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சென்னை ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் தலைவராகப் பணிபுரிந்தார். இவர் எழுதிய ‘பத்மினி’ என்ற வரலாற்று நாவல், 1903-ல் லண்டனில் அச்சிடப்பட்டது. இந்நூல், தமிழர் ஒருவர் எழுதிய முதல் ஆங்கில வரலாற்று நாவலாகக் கருதப்படுகிறது.
பிறப்பு, கல்வி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.