under review

சின்னவப் புலவர்

From Tamil Wiki

சின்னவப் புலவர் (1877-1962) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னவப் புலவர் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த செட்டிபாளையம் என்னும் ஊரில் கணபதிப்பிள்ளைச் சட்டம்பியாருக்கு மகனாக 1877இல் பிறந்தார். இவரின் தந்தை தமிழாசிரியர்.

இலக்கிய வாழ்க்கை

சின்னவப் புலவர் கவிப்பாடல்கள் பல இயற்றினார். இவர் மழை வேண்டிக் கந்தையன் பேரில் காவடிப் பாட்டு(1984) பாடினார். அம்பாரைக் கொலனி, இலங்கைச் சுதந்திரம் என இவர் பாடிய பாடல்கள் அச்சேறியுள்ளன.

மறைவு

சின்னவப் புலவர் 1962இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கந்தையன் காவடிப் பாட்டு(1984)
  • அம்பாரைக் கொலனி
  • இலங்கைச் சுதந்திரம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:சின்னவப் புலவர், கணபதிப்பிள்ளை: noolaham


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.