பிள்ளையார் கதை
பிள்ளையார் கதை (பதினெட்டாம் நூற்றாண்டு முற்பகுதி) வரதபண்டிதர் இயற்றிய சைவ நூல்.
நூல் பற்றி
பிள்ளையார் கதை வரத பண்டிதர் இயற்றிய நூல். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தால் பதிப்பிக்கப்பட்டது.
உள்ளடக்கம்
விநாயக விரதங்கள் நோற்றவர்கள் பெற்ற பேருகளை விரத நாட்களில் நினைவு கூர்ந்து விநாயகப் பெருமாள் மேல் அன்பை பெருக்க காரணமான கந்த புராணம், லிங்க புராணம், உபதேசக் காண்டம் முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகரின் மகிமைகளைத் திரட்டி ”பிள்ளையார் கதை” நூலை வ்ரத பண்டிதர் எழுதினார்.
பிள்ளையார் காப்பு, துதி, சப்பாணி என்பவற்றோடு சரஸ்வதி துதியுடன் கதை ஆரம்பமாகிறது. பிள்ளையார் பெருமை, திருவிளையாடல், அவரை வழிபட்டு உயர்ந்தவர்கள் கதை ஆகியவை இந்நூலில் சொல்லப்படுகிறது.
நடை
வெண்கரி முகமும் வியன்புழைக் கையோடு
ஐங்கர தவமும் மலர்ப்பாதம் இரண்டும்
பவளத்து ஒளிக்கோர் பைந்துவர் வாயும்
தவளக் கிம்புரித் தடருப்பு இரண்டும்
கோடி சூரியர் போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
இணைப்புகள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.