under review

எப்.ஜி. நடேசய்யர்

From Tamil Wiki
Revision as of 12:18, 11 September 2022 by Ramya (talk | contribs)
எப்.ஜி. நடேசய்யர் (நன்றி: சு. முருகானந்தம்)

எப்.ஜி. நடேசய்யர் (1880-1963) தமிழ் நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர். திருச்சியில் ஆர்.ஆர். சபாவை நிறுவி நாடக அரங்காற்றுகைகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

எப்.ஜி. நடேசய்யர் புதுக்கோட்டையில் 1880இல் கங்காதர சாஸ்திரிகளுக்குப் பிறந்தார். ரயில் வேயில் அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டே அமெச்சூர் குழுவொன்றை நடத்தி நாடகங்களில் நடித்து வந்தவர்.

நாடக வாழ்க்கை

இசை நாடகங்கள் பல வடிவமைத்து அரங்கேற்றினார். 1914இல் திருச்சியில் ரசிக ரஞ்சன சபாவைத் (ஆர்.ஆர். சபா) தொடங்கினார். மனோகரா, லீலாவதி, வேதாள உலகம் போன்ற நாடகங்களை இச்சபாவில் அரங்கேற்றினார். மனோகரா நாடகத்தின் வெற்றியால தன் உறையூர் வீட்டிற்கு “மனோகரா விலாஸ்” என்று பெயரிட்டார். கே.பி. சுந்தராம்பாளின் பாடல் திறமையைக் கேட்டு அவரை நாடகக் கம்பெனிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஸேவாஸதனம்

திரைப்படம்

ஸேவாஸதனம் என்ற கே. சுப்ரமணியத்தின் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் நடித்தார்.

பட்டம்

  • எப்.ஜி. நடேசய்யருக்கு ரிஷிகேசம் சுவாமி சிவானந்தர் ’நாடகக் கலாநிதி பட்டம்’ பெற்றார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

  • மனோகரா
  • லீலாவதி
  • வேதாள உலகம்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.