எப்.ஜி. நடேசய்யர்

From Tamil Wiki
Revision as of 11:50, 11 September 2022 by Ramya (talk | contribs)
எப்.ஜி. நடேசய்யர்

எப்.ஜி. நடேசய்யர் (1880-1963) தமிழ் நாடக நடிகர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர். திருச்சி ஆர்.ஆர். சபாவை நிறுவி நாடக அரங்காற்றுகைகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

எப்.ஜி. நடேசய்யர் புதுக்கோட்டையில் 1880இல் ரயில்வே அதிகாரியான கங்காதர சாஸ்திரிகளுக்குப் பிறந்தார்.

நாடக வாழ்க்கை

இசை நாடகங்கள் பல வடிவமைத்து அரங்கேற்றினார். 1914இல் திருச்சியில் ரசிக ரஞ்சன சபாவைத் (ஆர்.ஆர். சபா) தொடங்கினார். மனோகரா, லீலாவதி, வேதாள உலகம் போன்ற நாடகங்களை இச்சபாவில் அரங்கேற்றினார். மனோகரா நாடகத்தின் வெற்றியால தன் உறையூர் வீட்டிற்கு “மனோகரா விலாஸ்” என்று பெயரிட்டார்.

திரைப்படம்

சேவாசதனம் கே. சுப்ரமணியத்தின் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் நடித்தார்.

பட்டம்

  • எப்.ஜி. நடேசய்யருக்கு ரிஷிகேசம் சுவாமி சிவானந்தர் ’நாடகக் கலாநிதி பட்டம்’ பெற்றார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

  • மனோகரா
  • லீலாவதி
  • வேதாள உலகம்

உசாத்துணை

  • நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி: சு. முருகானந்தம்