ராய. சொக்கலிங்கன்
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் ராய. சொக்கலிங்கன். (ராய.சொ) (1898-1974). ‘ஊழியன்’ இதழின் ஆசிரியர். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சமூக சேவகர்.
பிறப்பு, கல்வி
ராய. சொக்கலிங்கன், (ராய.சொ) காரைக்குடியை அடுத்த அமராவதி புதூரில் அக்டோபர் 30, 1898-ல், ராயப்பச் செட்டியார்-அழகம்மை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தந்தை ராயப்பச் செட்டியார் பாலக்காட்டில் தனவணிகம் செய்து வந்தார். அதனால் குடும்பத்துடன் அங்கு சென்று வசித்தார். பாலக்காட்டில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மலையாளம், தமிழ் இரண்டையும் பயின்றார் சொக்கலிங்கன். தந்தைக்கு பர்மாவில் தன வணிகம் செய்யும் வாய்ப்பு வந்ததால், சொக்கலிங்கனும் உடன் சென்றார். அங்கு வணிக நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன் ஆங்கிலம் மற்றும் பர்மிய மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.
தம் பதினெட்டாம் வயதில் காரைக்குடி திரும்பினார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் பண்டிதர் சிதம்பர ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.