being created

பிங்கல நிகண்டு

From Tamil Wiki
Revision as of 21:35, 26 August 2022 by ASN (talk | contribs) (Image Added; Para Added)
பிங்கல நிகண்டு - 1917

பிங்கலர் என்பவரால் இயற்றப் பெற்ற நூல் பிங்கலம். பிங்கலம் என்றால் பொன்னிறம் என்று பொருள். இதற்குப் ‘பிங்கலந்தை’ என்ற பெயரும் உண்டு.  இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இதில் 4121 நூற்பாக்கள் உள்ளன. பிற்கால வழக்கில் இந்நூல் ‘பிங்கல நிகண்டு’ என்று அழைக்கப்பட்டது. நிகண்டு நூல்களில் மிகச் சிறந்த நூலாகப் பிங்கல நிகண்டு கருதப்படுகிறது.

பதிப்பு, வெளியீடு

திவாகர நிகண்டிற்குப் பிந்தியது பிங்கலந்தை. ‘தமிழ்ப் பிங்கல நிகண்டு’, ‘பிங்கலந்தை’ என்றும் இந்நூல் அழைக்கபடுகிறது. இந்நூலை 1890-ல் தி. சிவன்பிள்ளை பதிப்பித்துள்ளார்.தொடர்ந்து  யாழ்ப்பாணம்‌ ஆறுமுக நாவலர்‌, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  மர்ரே எஸ்‌. இராஜம்‌ ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நூலைப்‌ பதிப்பித்துள்ளனர்‌.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.