ராஜா சந்திரசேகர்
From Tamil Wiki
ராஜா சந்திரசேகர் (1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார்.
பிறப்பு, கல்வி
ராஜா சந்திர சேகர் 9 பிப்ரவரி 1955ல் சென்னையில் கண்ணன்– ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அ க்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன். திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ( Rghtfeel Productions)
இலக்கியவாழ்க்கை
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்
விருதுகள்
2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)
திரைப்படம்
- சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
- நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
நூல்கள்
- கைக்குள் பிரபஞ்சம்
- என்னோடு நான்
- ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
- நினைவுகளின் நகரம்
- .அனுபவ சித்தனின் குறிப்புகள்
- மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
- மிதக்கும் யானை
- மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)