being created

கோவி. மணிசேகரன்

From Tamil Wiki
கோவி. மணிசேகரன்

பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் கோவி. மணிசேகரன்.(இயற்பெயர் : சுப்பிரமணியன்; பிறப்பு: மே 2, 1927; இறப்பு: நவம்பர் 18, 2021) நூற்றுக்கணக்கான வரலாற்று நாவல்களை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கோவி. மணிசேகரன், மே 2, 1927 அன்று, வேலூரை அடுத்த சல்லிவன்பேட்டையில், கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பச் சூழலால் முறையான பள்ளிக் கல்வி இவருக்கு அமையவில்லை. சிலகாலம் அச்சுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். பின் வேலூரில் பேராசிரியா் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். தனித்தேர்வராகத் தேர்வு எழுதி ‘மெட்ரிக்’ தேர்ச்சி பெற்றார். வேலூர் அண்ணல் தங்கோவிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூக்ஷணம்’ பட்டம் பெற்றார். இசை ஆர்வத்தால் சித்தூர் சுப்பிரமணியத்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் மதுரை சோமு. ஓய்வு நேரத்தில் சம்ஸ்கிருதமும் பயின்று தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, இலக்கிய, வரலாற்று ஆர்வத்தால் ஆண்களுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், பெண்களுக்கு பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்றும் பெயரிட்டார்.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.