தாயம்மாள் அறவாணன்

From Tamil Wiki

தாயம்மாள் அறவாணன் (மே 23, 1944) எழுத்தாளர்.

வாழ்க்கைக்குறிப்பு

சேந்தன்புதூரில் மே 23, 1944இல் பிறந்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பதினெட்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பெண்ணியம் தொடர்பாக பல நூல்களை எழுதினார். அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருபவர். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கியுள்ளவருமாவார்.

விருதுகள்

  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்மன்றம் வழங்கும் நூல்கள், கட்டுரைகளுக்கான பரிசில்கள்
  • 2016இல் தாயம்மாள் அறவாணனின் ‘அவ்வையார் படைப்பு களஞ்சியம்’ நூலுக்கு சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசை தினத்தந்தி செய்தித்தாள் நிறுவனம் வழங்கியது

நூல் பட்டியல்

  • ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை
  • மகடுஉ முன்னிலை

உசாத்துணை