வே. நந்தகோபாலன்

From Tamil Wiki
Revision as of 16:31, 23 June 2022 by Ramya (talk | contribs)
வே. நந்தபோபாலன் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

வே. நந்தகோபாலன் (பிப்ரவரி 21, 1960) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்துக் கலைஞராக நினைவுக்கூறப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, கற்கோவளம் பருத்தித்துறையில் பிப்ரவரி 21, 1960இல் நந்தகோபாலன் பிறந்தார்.

கலை வாழ்க்கை

1980 முதல் பல நாடகங்களில் சிறிய நாடகங்களில் நடித்தார். காத்தவராயன் நாடகத்தில் நடுக்காத்தான் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 1999இல் கற்கோவளம் வேணுகான சபாமன்றம் அண்ணாவியாராகப் பதவியேற்ற பின்பு, ஊர் பெரியோர்களை அழைத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி கும்பிஅம்பாள் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி அன்று அரங்கேற்றினார். காத்தவராயன் நாடகம் முப்பத்தியாறு தடவை மேடையேறி வரமராட்சியிலே புகழ்பெற்றது. 1992இல் பதினாறு வயதுப் பெண் பிள்ளைகளுக்குக் காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி தும்பளை, நெல்லண்டை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அரங்கேற்றினார்.

1993இல் சத்தியவான் சாவித்திரி நாடகம், அரிச்சந்திர மயானகாண்டம் ஆகிய இரு நாடகங்களையும் பழக்கி கும்பி அம்பாள் ஆலயத்தில் அரங்கேற்றினார். இந்த நாடகங்களில் நாரதராகவும், அரிச்சந்திரனாகவும் நடித்தார். 1997இல் சிறுவர்ளுக்கு காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடத்திய காத்தவராயன் நாட்டுக் கூத்துப் போட்டியில் பெரிய கலைஞர்களுடன் போட்டி போட்டு இரண்டாவது இடத்தைப் பெற வைத்தார்.

விருதுகள்

  • அரிச்சந்திரன் நாடகத்திற்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அரங்கேற்றிய கூத்துகள்

  • காத்தவராயன் கூத்து
  • சத்தியவான் சாவித்திரி
  • அரிச்சந்திர மயானகாண்டம்

உசாத்துணை