first review completed

சியாமளா பாலகிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 19:32, 7 June 2022 by Logamadevi (talk | contribs)
சியாமளா பாலகிருஷ்ணன் (நன்றி- அரவிந்த் சுவாமிநாதன்)

சியாமளா பாலகிருஷ்ணன் (20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

புகழ்பெற்ற மருத்துவராகவும், எழுத்தாளருமாகவும் திகழ்ந்த புரசு பாலகிருஷ்ணனின் மனைவி சியாமளா பாலகிருஷ்ணன்.

இலக்கிய வாழ்க்கை

குறிப்பிடத் தகுந்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். சக்தி, மங்கை, கல்கி உள்ளிட்ட இதழ்களில் எழுதியிருக்கிறார். ”பிரச்னை” சிறுகதை 1945-ல் நவசக்தி ஆண்டு இதழில் வெளியானது. 'வேலை தேடிய ரங்கன்', ‘அஞ்ஞானம்’, 'மருதையின் கடிதம்', 'சாந்தி' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். 'பெண்களும் பத்திரிகை உலகமும்' என்ற கட்டுரையை மங்கை இதழில் எழுதினார். ஆண்டன் செகாவின் நாவலை, 'சிங்காரி' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • வேலை தேடிய ரங்கன்
  • அஞ்ஞானம்
  • மருதையின் கடிதம்
  • சாந்தி
  • பிரச்னை
மொழிபெயர்ப்பு
  • சிங்காரி

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.