சியாமளா பாலகிருஷ்ணன்
சியாமளா பாலகிருஷ்ணன் தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அக்காலத்தில் புகழ்பெற்ற மருத்துவராகவும், சிறந்த எழுத்தாளருமாகவும் திகழ்ந்தவர் புரசு பாலகிருஷ்ணன். அவரது மனைவி சியாமளா பாலகிருஷ்ணன்.
இலக்கிய வாழ்க்கை
குறிப்பிடத் தகுந்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். சக்தி, மங்கை, கல்கி உள்ளிட்ட இதழ்களில் எழுதியிருக்கிறார். ”பிரச்னை” சிறுகதை 1945-ல் நவசக்தி ஆண்டு இதழில் வெளியானது. 'வேலை தேடிய ரங்கன்', ‘அஞ்ஞானம்’, 'மருதையின் கடிதம்', 'சாந்தி' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். 'பெண்களும் பத்திரிகை உலகமும்' என்ற கட்டுரையை மங்கை இதழில் எழுதினார். ஆண்டன் செஹாவின் நாவலை, 'சிங்காரி' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
நூல்கள்
சிறுகதைகள்
- வேலை தேடிய ரங்கன்
- அஞ்ஞானம்
- மருதையின் கடிதம்
- சாந்தி
- பிரச்னை
மொழிபெயர்ப்பு
- சிங்காரி
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.