under review

சரஸ்வதி அந்தாதி

From Tamil Wiki
Revision as of 15:47, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சரஸ்வதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரஸ்வதி (பெயர் பட்டியல்)
panuval.com

சரஸ்வதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். இந்நூல் அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. கல்வித் தெய்வமான கலைமகளைப் போற்றிப் பாடும் நூல்.

ஆசிரியர்

கம்பர் தமிழின் பெருங்காப்பியமான கம்பராமாயணத்தை இயற்றியவர். ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சடகோபர் அந்தாதி ஆகியவையும் கம்பர் இயற்றிய நூல்களே.

பார்க்க : கம்பர்

நூல் அமைப்பு

காப்புச் செய்யுளுடன் துவங்கி, மூப்பது பாடல்கள் கலைமகளைப் போற்றும் அந்தாதியாக அமைந்துள்ளன.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை -தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.

என்னும் காப்புச்செய்யுள் புகழ்பெற்றது.பலரால் துதிப்பாடலாகப் பாடப்படுகிறது.

உசாத்துணை

சரஸ்வதி அந்தாதி-சென்னை நூலகம்

சரஸ்வதி அந்தாதி-சுதா ரகுநாதன் youtube.com



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:32:51 IST