வரதராச பண்டிதர்
From Tamil Wiki
Revision as of 19:26, 23 April 2022 by Logamadevi (talk | contribs)
வரதராச பண்டிதர் (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், சோதிடர், வைத்தியர் .
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையரின் மகன். தமிழ் இலக்கியம், இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை படைத்தவர். சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகளில் அறிவுடையவராய் விளங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
வரககவி என்று அழைக்கப்பட்டார். அமுதாகரம் எனும் மருத்துவ நூலை எழுதினார். புராணம், தூது ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் எழுதினார். சிவராத்திரிபுராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது ஆகியவை இவர் எழுதிய சிற்றிலக்கிய நூல்களாகும்.
நூல்கள் பட்டியல்
- சிவராத்திரிபுராணம்
- ஏகாதசிப் புராணம்
- அமுதாகரம்
- கிள்ளைவிடுதூது
- பிள்ளையார் கதை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.