standardised

வரதராச பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 20:54, 20 April 2022 by Tamizhkalai (talk | contribs)

வரதராச பண்டிதர் (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், சோதிடர், வைத்தியர் என பன்முகங் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையரின் மகன். தமிழ் இலக்கியம், இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை படைத்தவர். சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகளில் அறிவுடையவராய் விளங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

வரககவி என்று அழைக்கப்பட்டார். அமுதாகரம் எனும் மருத்துவ நூலை எழுதினார். புராணம், தூது ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் எழுதினார். சிவராத்திரிபுராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது ஆகியவை இவர் எழுதிய சிற்றிலக்கிய நூல்களாகும்.

நூல்கள் பட்டியல்

  • சிவராத்திரிபுராணம்
  • ஏகாதசிப் புராணம்
  • அமுதாகரம்
  • கிள்ளைவிடுதூது
  • பிள்ளையார் கதை

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.