standardised

கழுகுமலை வெட்டுவான் கோயில்

From Tamil Wiki
கழுகுமலை வெட்டுவான் கோயில் (நன்றி ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

கழுகுமலை வெட்டுவான் கோயில் (பொ.யு. 800) பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் ஆட்சிக்காலத்தில் திராவிடக் கட்டிடக்கலையில் உருவான கோயில். தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ள கோயில். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ளது.

அமைப்பு

வெட்டுவான் கோயில் சிற்பம்

கழுகுமலை மலைப்பகுதியிலுள்ள கருங்கல்லைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில். திராவிடக் கட்டடக்கலைப்பாணியின் அம்சங்களான, பிரகாரம், அதிட்டானம், விமானம், கருவறை, அர்த்த மண்டபம், தெய்வங்கள் ஆகிய யாவும், மலைப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. கற்கோவிலுக்கும், மலைக்கும் இடையிலுள்ள குடைந்தெடுக்கப்பட்ட பகுதி, கோவிலின் வெளிப்பிரகாரமாக உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும், மலையின் உட்பகுதி குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.

நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது. கருவறையுடன் கூடிய விமானம் அமைந்த இக்கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல் உள்ளது. மாமல்லபுரத்திலூள்ள குடைவரைக்கோயில் பாணியில் குடைவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் குடைவிக்கப்பட்டுள்ளது. இதன் விமானத்திலுள்ள சிற்பங்கள் பராந்தக நெடுஞ்சடையான் ஆட்சிகாலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள்

கருவறையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தைச் சுற்றிலும் பிரம்மா, திருமால், சிவன், சந்திரன், தேவகன்னியர், பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமை பெறாத சிற்பங்களும் உள்ளன. பூதகணங்கள் ஒவ்வொரு சிலைகளிலும் ஒவ்வொரு உணர்வுகள் வடிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.