being created

ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான்

From Tamil Wiki
Revision as of 06:08, 27 May 2024 by Ramya (talk | contribs)

ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான் (மே 16, 1967) ஈழத்துப் பெண் எழுத்தாளர். திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் படைத்த முதல் பெண்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான் இலங்கை திருகோணமலை, கிண்ணியாவில் தௌபீக், அபீபா உம்மா இணையருக்கு மே 16, 1967-ல் பிறந்தார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார்.

பணி

ஜெனீரா தௌபீக் ஹைருன் 1991-ல் அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். இதே பள்ளியில் ஆசியராகப் பணியாற்றினார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான் ஏழு வயது முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு ”எனது பொழுதுபோக்கு” என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. 1991-ல் ”பாலர் பாடல்” எனும் சிறுவர் இலக்கிய நூலை வெளியிட்டார்.

விருதுகள்

  • திருகோணமலை நூலக சபை விருது, கிண்ணியா பிரதேச செயலகம் இலக்கியத் தாரகை விருது, கிழக்கு மாகாண சாஹித்திய விருது – சிறுவர் இலக்கியம்

நூல் பட்டியல்

சிறுவர் இலக்கியம்
  • பாலர் பாடல்

உசாத்துணை

  • ஆளுமை:ஜெனீரா, தௌபீக் ஹைருன் அமான் - நூலகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.