under review

ஜஜீலா பார்த்தீபன்

From Tamil Wiki
Revision as of 16:14, 8 May 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})

ஜஜீலா பார்த்தீபன் (கோபிகை) (பிறப்பு: செப்டம்பர் 9, 1981) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜஜீலா பார்த்தீபன் இலங்கை யாழ்ப்பாணம் தம்பான், கரணவாயில் செப்டம்பர் 9, 1981-ல் பிறந்தார். கிளிநொச்சி தருமபுரம் மேற்கை வசிப்பிடமாகக்கொண்டவர். கிளிநொச்சி தருமபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

இதழியல்

ஒளி அரசி சஞ்சிகையில் பணியாற்றி வரும் இவர் அதன் இலக்கிய, நேர்காணல் பகுதிக்கு பொறுப்பாளராகவுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

பா.ஜஜீலா என்ற பெயருடனும் கோபிகை எனும் புனைபெயருடனும் நாளிதழில்களில் எழுதி வருகிறார். கட்டுரை, விமர்சனம், கதைகள், தொடர்கதைகள், கவிதைகள் எழுதினார். பெண்ணியம், சமூக விடுதலை, சுதந்திரவேட்கை, சமூக சீரழிவுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு எழுதினார். அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதினார். சுடரொளி, வலம்புரி, தினக்குரல், உதயன் ஆகிய நாளிதழ்களிலும் ஒளி அரசி சஞ்சிகையிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.