எஸ்.யூ. செசிலியா
எஸ்.யூ. செசிலியா (பிறப்பு: நவம்பர் 8, 1954)ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ்.யூ. செசிலியா இலங்கை சம்மாந்துறையில் நவம்பர் 8, 1954-ல் பிறந்தார். சலமோன் உத்திரியம்மாள் செசிலியா என்னும் முழுப்பெயர். வீரமுனை ராமகிருஷ்ண சங்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார்.
நாடக வாழ்க்கை
தனது ஐந்தாம் வகுப்பு முதல் நாடகம், நடனம், பாடல், நாட்டாரியல், ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். பல நாடகங்கள் தயாரித்து மேடையேற்றியுள்ளார். கோயில், திருவிழாக்கள், கலாமன்றங்கள் ஊடாக இவரின் சமூக நாடங்கள், புராண நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. ஹரிசந்திரா, அன்பைத்தேடி புராண நாடகமும் சந்தேகம் என்னும் அரச நாடகமும் குறிப்பிடத்தக்கது. விடிவு வருமா எனும் சமூக நாடகம் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ்.யூ. செசிலியாவின் கவிதைகள் எழுதினார். கரையைத் தேடு எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
நூல் பட்டியல்
கவிதைத்தொகுப்பு
- கரையைத் தேடு
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.