being created

அ. யேசுராசா

From Tamil Wiki

அ.யேசுராஜா (அ. யேசுராசா, அத்தனாஸ் யேசுராசா)(பிறப்பு : டிசம்பர் 30, 1946) டிசம்பர் 30,ஈழக் கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர், பதிப்பாளர் . கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர் . யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் ஆகியவற்றிலும் செயல்பட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணத்தில்  குருநகர் என்ற கடலோரக் கிராமத்தில் டிசம்பர் 30, 1946 அன்று அத்தனாஸ், செபஸ்தியானா இணையருக்கு யேசுராசா பிறந்தார். கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் (G.C.E. O/L) வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியைக் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார்.

தனி வாழ்க்கை

அஞ்சல் அதிபர், தந்தியாளர் (Postmaster & Signaller) சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

1975-ல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 -1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான 'கவிதை' இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் 'தெரிதல்' என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

இதழியல்

லை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.

திரைத்துறை

1979 – 1982 காலகட்டத்தில், ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பின்மூலம், நல்ல பிறமொழிப் படங்களை யாழ்ப்பாணத்தில் திரையிடுவதில் ஆர்வத்துடன் இயங்கினேன். 1998 – 2006 வரையான ஆண்டுகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா. சிவச்சந்திரனுடன் இணைந்து, ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்டினோம்; காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடலையும் நடத்தினோம். நல்ல திரைப்படங்கள் பற்றி அவ்வப்போது சிற்றிதழ்களில் எழுதியும் வந்துள்ளேன். அவ்வெழுத்துக்கள் ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் நூலாக வந்துள்ளன. அண்மைக் காலங்களில் நடைபெறும் இளைஞர்களின் சில குறும்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் எனது மதிப்பீட்டுக் கருத்துக்களை முன்வைத்து,  உரையாடி வருகிறேன்



நூல்கள்

  • தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)
  • அறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" - (கவிதை, 1984, 2003)
  • மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, 1985, 1996)
  • காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, 1994)
  • தூவானம் - (பத்தி, 2001)
  • பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
  • பதிவுகள்" - (பத்தி, 2003)
  • குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
  • திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)












🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.