சிபானா சம்சுதீன்
From Tamil Wiki
சிபானா சம்சுதீன் (பிறப்பு: நவம்பர் 7, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிபானா சம்சுதீன் இலங்கை சம்மாந்துறையில் பிறந்தார். தந்தை சம்சுதீன். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிபானா சம்சுதீன் கவிதைகள் எழுதினார். மெட்ரோநியூஸ், வீரகேசரி ஆகிய நாளிதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதைகள் ஊவா சமூக வானொலி மூலம் சிபானா சம்சுதீன் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகின.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.