இந்திரா செல்வநாயகம்
From Tamil Wiki
Revision as of 21:31, 8 February 2024 by Tamizhkalai (talk | contribs)
இந்திரா செல்வநாயகம் (பிறப்பு : ஏப்ரல் 8, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு ஏப்ரல் 8, 1968-ல் பிறந்தார். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
இந்திரா செல்வநாயகம் 2003-ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்( 2007), சீரிய சிந்தனைகள்,(2017), சமகால உளவியல் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
நூல் பட்டியல்
- வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்
- சீரிய சிந்தனைகள்
- சமகால உளவியல்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.