கர்ணாமிர்த சாகரம்
கர்ணாமிர்த சாகரம் ( 1917,1946)) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசைநூல். தமிழிசையின் பண்பாட்டு அடித்தளம், அதன் வரலாற்று பின்னணி, அதன் பண்களின் அமைப்பு, பண்கள் உருவாகும் கணிதமுறை ஆகியவற்றை விவாதிக்கும் கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல். தமிழிசை இயக்கத்தின் மூலநூல்களில் ஒன்று
எழுத்து, வெளியீடு
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1912 முதல் தமிழிசை ஆய்வில் ஈடுபட்டார். 1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார். அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தன் ஆய்வுமுடிவுகளை தொகுத்து அவர் எழுதிய நூல் இது. முதல்நூல் 1917ல் வெளியாகியது. 1200 பக்கங்களில் நான்கு பகுதிகளாக அமைந்தது.
கர்ணாமிர்த சாகரத்தின் இரண்டாம்நூலின் மூன்று பகுதிகளின் 256 பக்கங்களை அச்சிட்டிருந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் மறைந்தார். ஆகவே அவர் மகள் மரகதவல்லி துரைபாண்டியன் அவர் எழுதியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கர்ணாமிர்தசாகரம் நூலை எழுதி முடித்தார். அவர் மகள் ஞானச்செலவம் தவப்பாக்கியம் அவருக்கு இசைக்குறிப்புகளில் உதவிசெய்தார். ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர் ஆ.சுந்தரபாண்டியன் 1946ல் இரண்டாம் பகுதியை வெளியிட்டார். பின்னர் அவை ஒரே நூலாக வெளியிடப்பட்டன.
உள்ளடக்கம்
கர்ணாமிர்த சாகரம் முதல்நூல் நான்கு பாகங்களைக் கொண்டது.
முதல்நூல் (1917)
முதற்பாகம்
மூன்று தமிழ்ச்சங்கங்கள், குமரிக் கண்டம், கடல்கோள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம்
இசை இயற்பியல் குறித்த விவாதங்கள் கொண்டது. இதில் சுருதிகளைப் பற்றிய பண்டிதரின் கொள்கை கூறப்படுகிறது. 12 ராசி சக்கரத்தின் அடிப்படையில் சுருதிகளின் கணக்கு விளக்கப்படுகிறது பன்னிரண்டின் இருமடங்கு 24 . எனவே சுருதிகள் 24 என்றும் 22 சுருதிகள் என்னும் சாரங்கதேவரின் ஏற்றிக்கொள்ளப்பட்ட கூற்று கணிதமுறைபப்டி பிழை என்றும் சொல்கிறார்.
மூன்றாம் பாகம்
தமிழிசையியலில் பண்களின் இடம், பண்களின் அமைப்புகள் பற்றிய விவாதங்கள். பெரும்பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னுமட் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகிறது.
நான்காம் பாகம்
இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை குறித்து பேசப்படுகிறது. மானுட உடலுக்கும், யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்து விளக்கப்படுகிறது.
இரண்டாம் நூல் (1946)
கர்ணாமி
இணைப்பு
.