சூசன்னா எமிலியா ஆடிஸ்
சூசன்னா எமிலியா ஆடிஸ் ( ) கோவையின் முதல் ஆங்கிலப்பள்ளியின் ஆசிரியை. அதன் நிறுவனரான ஆடிஸ் அவர்களின் மனைவி
பிறப்பு
சூசன்னா சென்னையில் 2 ஆகஸ்ட்1802ல் தாமரிசியஸ் வான் சமோரன் (Tamericus Carolus van Someren) னுக்கு பிறந்தார்.
தனிவாழ்க்கை
லண்டன் மிஷன் போதகரான வில்லியம் பான் ஆடிஸ் (William Bawn Addis) ஐ மணந்தார். இவர்களுக்கு ஹென்றி பான் ஆடிஸ், வில்லியம் ஜட்ஸன் ஆடிஸ் என இரு பிள்ளைகள். வில்லியன் ஜட்ஸன் ஆடிஸ் லண்டன் மிஷன் போதகராக இருந்தார்.
கல்விப்பணி
கோவை மரக்கடையில் கிறித்துவப்பேட்டையில் 1831 ல் லண்டன் மிஷன் சொசைட்டியால் ஆரம்பிக்கப்பட்ட வெர்னாகுலர் பள்ளியை வில்லியம் பான் ஆடிஸ் பாதிரியாரும் அவர் மனைவி சூசன்னா எமிலியா ஆடிஸும் நடத்தினர்.சூசன்னா அங்கே முதல் ஆசிரியை. அதே ஆண்டில், லண்டன் மிஷன் சொசைட்டியால் இன்னொரு தொடக்கப்பள்ளி ராஜவீதியில் துவங்கப்பட்டு, பிறகு அது, 1898 ல் யூனியன் ஹைஸ்கூல் தெருவுக்கு இடம்பெயர்ந்தது. சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியாக மாற்றமடைந்துள்ளது.
மறைவு
27 பெப்ருவரி 1898ல் மறைந்தார்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.