லக்ஷ்மி சரவணகுமார்
This page is being created by muthu_kalimuthu
லக்ஷ்மி சரவணகுமார், தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.
தனி வாழ்க்கை
திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார். ‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர்.
பங்களிப்பு
இலக்கியம்
எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் பல தளங்களில் எழுதி வருபவர்.
2007, நவம்பர் மாதத்தில் `புதிய காற்று' இதழில் வெளியான `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது'தான் என் முதல் சிறுகதை
கதைகளில் வெளிப்படுவது வெறுமனே பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களும் வன்முறைகளும். கொமோரா, நீலப்படம் இரண்டு நாவல்களுமே சிறுவயதில் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறவர்களின் அகச்சிக்கலைத்தான் பிரதானமாய்ப் பேசுகிறது.
காட்சி ஊடகத்துக்கான மொழியை என் எழுத்தில் பயன்படுத்துகிறேன். நாவல்கள் திரைக்கதை வடிவில் அமைந்திருக்கின்றன.
நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்குள் இருக்கும் நேசத்தைப் பேச விழையும் கதை இது. சொல்லப்போனால் வெறுப்புணர்விலிருந்து கற்றுக்கொண்ட மிக மோசமான பாடங்கள்தான் நேசத்தின் மதிப்பை புரியவைத்திருக்கின்றன. இந்த நாவலை ஸீரோ டிகிரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளார்கள்."
வெறுப்பின் பிரதியான `கொமோரா’வுக்குள் நிபந்தனையற்ற நேசத்தை மட்டுமே பேசவிழையும் `ரூஹி’ன் கதை.
விருது
கானகன்' என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர். 'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.
நூல் பட்டியல்
நாவல்கள்
- வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
- மச்சம் (2013)
- உப்பு நாய்கள் (புதினம்)
- கானகன் (நாவல் 2014)
- “மோக்லியை தொலைத்த சிறுத்தை (கவிதை தொகுப்பு 2014)
- நீலப்படம் (புதினம், 2015)
- கொமோரா (புதினம்)
- உப்பு நாய்கள் (புதினம்)
- ரூஹ் (புதினம், 2019)
- வாக்குமூலம் (குறுபுதினம், 2020)
- ஐரிஸ் (புதினம், 2021)
சிறுகதை தொகுப்புகள்
- நீல நதி (சிறுகதைகள்)
- யாக்கை (சிறுகதைகள், 2010)
- முதல் கதை (சிறுகதைகள் தொகுப்பாசிரியர் 2021)
கட்டுரை
- தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.