கவிராச பண்டிதர்
கவிராச பண்டிதர் (வீரை கவிராச பண்டிதர்) (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சோழமண்டலத்திலே வீரை என்னும் ஊரிலே பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
சங்கராசாரியரால் வடமொழியிற் செய்யப்பட்டிருந்த செளந்தரியலகரி என்னும் நூலை இவர் தமிழில் இறக்கிப் பாடல் செய்தனர். நூற்றுநான்கு செய்யுளுள்ள இந்தப் பாடலுக்குச் செளந்தரியலகரி என்பது பொதுப் பெயராயினும், முதல் நாற்பது பாக்களும் ஆனந்தலகரி என்று பெயர்ப்பட, எஞ்சியவை மாத்திரமே அப்பெயராற் கூறப்படுகின்றன. இவர் சத்திபூசைக்காரராய் இருந்தனர் போலும். இவரது பாடல் பார்வதி சத்தியைப் புகழும் பாடலாதலால் அப்பட்சத்தார் இதை மெத்தவும் மெய்ச்சுவர். சன்மார்க்கர் உவட்டும் பெண் பாலுக்கு உரிய உவமான உவமேயங்களைத் தவிர்த்துப் பார்க்கிற் பாடல்கள் மிக உசிதங் கொண்டவைகள் என்பதற்கு ஐயமில்லை.
பாடல் நடை
மூலமணி பூரகத்தோ டிலிங்க மார்பு
முதுகளம்விற் புருவமொடு மொழிவ தாறு
ஞாலமுமென் புனலுமனற் பிழம்புங் காலு
நாதமுறு பெருவெளியு மனமு மாக
மேலணுகிக் குளபதத்தைப் பின்னிட் டப்பான்
மென்கமலத் தாயிரந்தோட் டருண பீடத்
தாலவிடம் பருகியதன் மகிழ்ந ரோடு
மானந்த முறும்பொருளை யறிய லாமே.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.