under review

வே. சிதம்பரப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வே. சிதம்பரப்பிள்ளை (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். ஆசிரியர். உரைகள் பல எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வே. சிதம்பரப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், பருத்தித் துறையில் மேலைப் புலோலியூரில் பிறந்தார். தன் பதின்மூன்றாவது வயதில் கண்பார்வையை முற்றாக இழந்தார். பிறர் வாசிக்கக் கேட்டும் அறிஞர் படிப்பிக்கும் இடங்களிலும், புராணபடனம் நடைபெறும் இடங்களிலும் போய்க் கேட்டு கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வே. சிதம்பரப்பிள்ளை புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் பாக்கள் இயற்றுவதிலும் புலமை பெற்றவர். மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பிப்பதற்காகத் திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடத்தினார். கந்தபுராணத்துச் சூரபன்மன் வதைப்படலத்திற்கு உரை எழுதினார். இந்த உரைக்கு உரையாசியர் க.க. முருகேச பிள்ளை தம்மிடமிருந்த பழைய உரை(முதல் 100 பாடல்கள்) ஒன்றையும், நல்லூர்ப் பொன்னம்பலப்பிள்ளை உரைக்குறிப்பினையும், அரும்பதக் குறிப்பினையும் வழங்கி உதவினர். சுப்பிரமணிய சாஸ்திரிகளும் நூல்களையும் குறிப்புகளையும் வழங்கி உதவினார். கந்தபுராணத்துக்கும் தெய்வானை திருமணப்படலத்துக்கும், திருவானைக்காப்புராணத்துக்கும் உரை எழுதினார்.

மறைவு

வே. சிதம்பரப்பிள்ளை நவம்பர் 15,1955-ல் காலமானார்.

நூல் பட்டியல்

உரைகள்
  • கந்தபுரணத்துச் சூரபன்மன் வதைப்படலம்
  • கந்தபுராணம்
  • தெய்வானை திருமணப்படலம்
  • திருவானைக்காப்புராணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:25 IST