தேவ. சித்ரபாரதி

From Tamil Wiki

தேவ.சித்ரபாரதி தமிழ் சிற்றிதழ் இயக்கத்தில் செயல்பட்டவர். இயற்பெயர் முகம்மது அப்பாஸ் இப்ராஹீம். ஞானரதம் என்னும் சிற்றிதழை நடத்தினார்

வாழ்க்கை குறிப்பு

என்.முகம்மது அப்பாஸ் இப்ராஹீம் வத்ராயிருப்பு என்னும் ஊரைச்சேர்ந்தவர். மதுரையில் நூலகராக இருந்தார். ஜெயகாந்தனின் நட்பு உருவானது. தேவ. சித்ரபாரதி என்று புனைபெயர் சூட்டிக்கொண்டார். சென்னைக்குச் சென்று ஜெயகாந்தன் ஐ ஆசிரியராகக் கொண்டு 1970 ஜனவரியில் ஞானரதம் என்னும் சிற்றிதழை தொடங்கினார். பிப்ரவரி 1972 முதல் தானே ஞானரதத்தின் ஆசிரியராக இருந்தார். திரைத்துறையில் ஈடுபாடு கொண்டு படத்தயாரிப்பில் இறங்கினாலும் வெற்றிபெறவில்லை