under review

பா. ராகவன்

From Tamil Wiki
Revision as of 07:58, 10 May 2023 by Tamizhkalai (talk | contribs)
எழுத்தாளர் பா. ராகவன்

பா. ராகவன் (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர்,பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதினார். இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு வசன கர்த்தா. ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார்.இவரின் வசனத்தில் வெளிவந்த வாணி-ராணி என்ற நெடுந்தொடர் 1750 எபிசோடுகளாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, கல்வி

பா. ராகவன் ஆர். பார்த்தசாரதி – ரமாமணி தம்பதியருக்கு அக்டோபர் 08, 1971-ல் சென்னையில் பிறந்தார். தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளர். ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, 'பாபர் நாமா', 'மகா வம்சம்' நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பா. ராகவன் தன் தந்தையின் பணி மாறுதல்கள் காரணமாக காஞ்சிபுரம் கிருஷ்ணா பள்ளி, கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இளங்கலை இயந்திரவியல் பயின்றார்.

தனிவாழ்க்கை

பா. ராகவன் மனக்கொந்தளிப்பின் காரணமாகத் துறவியாகிவிட நினைத்தார். இதன் காரணமாக சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம் ஆகியனவற்றுக்குச் சென்று வந்தார். இறுதியில் ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் உபதேசத்துக்கு இணங்கி, இல்வாழ்வுக்கும் இலக்கியப் படைப்பாக்க முயற்சிகளுக்கும் திரும்பினார்.

பா. ராகவன் 1997-ல் ரம்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ஒரே மகள் பாரதி.

பா. ராகவனின் முதல் படைப்பான 'குழந்தைப்பாடல்' கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது பல கவிதைகளை எழுதினார். தீவிர இலக்கியப் படைப்புகளைப் படித்து, சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து தீவிர இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் அமுதசுரபி இதழில் பணியாற்றினார். ம.வே. சிவகுமாரின் நட்பால் பத்திரிகைகளில் எழுதினார். 1992ஆம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய ‘மொஹஞ்சதாரோ’ என்ற சிறுகதையின் வழியாகப் படைப்பிலக்கியத் துறைக்குள் நுழைந்தார்.

பின்னர் கல்கி இதழில் எட்டாண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் குமுதம் இதழிலும் பணியாற்றினார். அதன் பின்னர் சபரி பப்ளிகேஷனில் பணியாற்றி, கிழக்கு பதிப்பகத்துக்கு வந்தார். ஏறத்தாழ 1000 நூல்களைப் பதிப்பித்தார். பின்னர் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பலவற்றுக்கு வசனம் எழுதினார். இவரின் வசனத்தில் வெளிவந்த வாணி-ராணி என்ற நெடுந்தொடர் 1750 எபிசோடுகளைக் கடந்து சாதனை படைத்தது. இவர் அபுனைவு அரசியல் கட்டுரை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

2000 ஆம் ஆண்டு வரை சிறுகதைகளும் நாவல்களும் மட்டும் எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், குமுதம் வார இதழில் பணி சேர்ந்த பின்பு பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினைத் தொடராக எழுதினார். அதன் வெற்றிக்குப் பின்பு டாலர் தேசம் [அமெரிக்க அரசியல் வரலாறு], நிலமெல்லாம் ரத்தம் [இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு], மாயவலை [சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்] உள்ளிட்ட ஏராளமான அபுனை நூல்களை எழுதினார். தொடர்ந்து பத்தாண்டுக் காலம் அரசியல் நூல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், 2017ம் ஆண்டு தமது ‘பூனைக்கதை' என்ற நாவலின் மூலம் மீண்டும் படைப்பிலக்கியத்துக்குள் திரும்பினார்.

இலக்கிய இடம்

வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள், மாணவ பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு வாய்ப்பினைத் தருவதற்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணை வார இதழினை நடத்திவருகிறார். யதி என்ற நாவல் வழியாகத் தன்னைப் புனைவு எழுத்தாளராகத் தடம்பதித்துக் கொண்டார். லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் விவகாரங்களைச் சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்ற வகையில் இவர் தனியிடம் பெறுகிறார்.

நூல்கள்

புதினங்கள்

o  அலகிலா விளையாட்டு

o  அலை உறங்கும் கடல்

o  இறவான்

o  கபடவேடதாரி

o  கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

o  கொசு

o  தூணிலும் இருப்பான்

o  நிலாவேட்டை

o  புவியிலோரிடம்

o  புல்புல்தாரா

o  பூனைக்கதை [2017]

o  மெல்லினம்

o  யதி [2018]

o  ரெண்டு

சிறுகதைத் தொகுப்புகள்

o  காந்தி சிலைக் கதைகள்

o  குதிரைகளின் கதை

o  பறவை யுத்தம்

o  மாலுமி [2018]

o  முந்நூறு வயதுப் பெண்

o  மூவர்

o  ஊர்வன

o  நிலா வேட்டை

அரசியல் வரலாறுகள்

o  மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு

o  பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு

o  டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)

o  9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)

o  நிலமெல்லாம் ரத்தம் (2005)

o  அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி (2005)

o  ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி (2006)

o  இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)

o  ஹிட்லர் (2006)

o  அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)

o  தாலிபன்

o  மீண்டும் தாலிபன் (2021)

o  ஜமா இஸ்லாமியா

o  ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்

o  பர்வேஸ் முஷரஃப்

o  மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்

o  ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்

o  காஷ்மீர்

o  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

o  ஆயில் ரேகை

o  பிரபாகரன் - வாழ்வும் மரணமும்

o  கலவரகாலக் குறிப்புகள்

o  ஆடிப்பாரு மங்காத்தா

o  பொன்னான வாக்கு

o  ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை

o  ஜெயித்த கதை

o  154 கிலோபைட்

o  24 கேரட்

o  ஓப்பன் டிக்கெட்

o  எக்சலண்ட்!

o  உக்ரையீனா

பொதுக் கட்டுரைகள்

o  தொடு வர்மம்

o  எழுதுதல் பற்றிய குறிப்புகள்

o  ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்)

o  24 கேரட்

o  154 கிலோபைட்

o  உணவின் வரலாறு

o  வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்

o  இளைப்பது சுலபம்

o  ருசியியல்

o  மூன்றெழுத்து

o  பின்கதைச் சுருக்கம்

o  எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம்

o  யானி: இசைப் போராளி

o  மகளிர் மட்டும்

நகைச்சுவை நூல்கள்

o  அன்சைஸ்

o  குற்றியலுலகம்

o  இங்க்கி பிங்க்கி பாங்க்கி

o  சந்து வெளி நாகரிகம்

o  உய் - வரி இலக்கியம்

o  வீட்டோடு மாப்பிள்ளை

வாழ்க்கை வரலாறு

o  பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு

சிறுவர் நூல்கள்

o  அமெரிக்க சுதந்தரப் போர்

o  இஸ்லாம்

o  மொசார்ட்

o  இரண்டாம் உலகப் போர்

o  மகாவீரர்

o  புதையல் தீவு

o  ஐஸ் க்ரீம் பூதம்

o  திரைப்படங்கள்

திரைப்படங்களுக்கு வசனம்

o  கனகவேல் காக்க [2010]

o  தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011]

தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம்

o  வாணி ராணி (சன் டிவி)

o  கல்யாணப் பரிசு (சன் டிவி)

o  கண்மணி (சன் டிவி)

o  கெட்டி மேளம் (ஜெயா டிவி)

o  சிவசக்தி (சன் டிவி)

o  உதிரிப்பூக்கள் (சன் டிவி)

o  செல்லமே (சன் டிவி )

o  முந்தானை முடிச்சு (சன் டிவி)

o  மனெ தேவுரு (உதயா டிவி)

o  முத்தாரம் (சன் டிவி)

o  செல்லக்கிளி ( சன் டிவி )

o  தேவதை (சன் டிவி)

o  புதுக்கவிதை (விஜய் டிவி)

o  கல்யாணப்பரிசு (சன் டிவி )

o  சிவசங்கரி (சன் டிவி)

o  என் இனிய தோழியே (ராஜ் டிவி)

o  அருந்ததி (ராஜ் டிவி )

o  கண்மணி (சன் டிவி)

o  சித்தி 2 (சன் டிவி)

o  புதுப்புது அர்த்தங்கள் (ஜீ டிவி)

2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் இந்திய சீரியல்களில், தமிழில் வெளிவந்தவற்றுள் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடராகும். 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது.

விருதுகள்

o  பாரதிய பாஷா பரிஷத்

o  இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)

o  திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)

o  கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)

o  சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018]

o  வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018)

உசாத்துணை

https://writerpara.com/

https://www.madraspaper.com/

https://www.hindutamil.in/author/2011-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14310&id1=3&issue=20181005

https://www.youtube.com/watch?v=51lhEeYFUW8



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.