first review completed

வரதராச பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
Line 28: Line 28:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
* [https://noolaham.net/project/156/15597/15597.pdf ஈழத்துத் தமிழறிஞர்கள்: த. துரைச்சிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு]
* [https://noolaham.net/project/156/15597/15597.pdf ஈழத்துத் தமிழறிஞர்கள்: த. துரைச்சிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு]
 
* வரதராச பண்டிதர்: tamilvu


{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 21:12, 1 January 2023

வரதராச பண்டிதர்(வரதப்பண்டிதர்) (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், சோதிடர், வைத்தியர். பிள்ளையார் கதை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அரங்கநாத ஐயருக்கு மகனாக 1656-ல் பிறந்தார். தமிழ் இலக்கியம், இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்கள் கற்றார். ஜோதிடம், வைத்தியம் ஆகிய துறைகளில் புலமை உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

வரதராச பண்டிதர் ‘வரககவி’ என்று அழைக்கப்பட்டார். தனிப்பாடல்கள் பல பாடினார். அவை கிடைக்கவில்லை. புராணம், தூது ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் எழுதினார். சிவராத்திரிபுராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது ஆகியவை இவர் எழுதிய சிற்றிலக்கிய நூல்கள். சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத மகிமையையும், ஏகாதசிப் புராணம் ஏகாதசி விரத மகிமையையும் கூறும் நூல். இந்நூல்களில் விரதத்தின் மகிமைகள், சைவ சமய மரபுகள் ஆகியவற்றை எழுதினார். கிள்ளைவிடுதூது நூல் கங்கேசன் துறைக்கு தன் பாகத்தில் கன்ணியவளை என்னும் தலத்தில் உள்ள குருநாத சுவாமியாகிய முருகனைப் போற்றும் நூல்.

விஷக்கடி முதலியவற்றுக்கு மருத்துவம் உரைக்கும் ‘அமுதாகரம்’ எனும் மருத்துவ நூலை எழுதினார். வரதப்பண்டிதர் எழுதிய ஆறு நூல்களைத் தொகுத்து இலங்கை அரசின் இந்து சமய கலாச்சாரத்திணைக்களம் 'வரத பண்டிதம்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டது.

மறைவு

வரதராச பண்டிதர் 1716-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • சிவராத்திரிபுராணம்
  • ஏகாதசிப் புராணம்
  • பிள்ளையார் புராணம்
  • அமுதாகரம்
  • கிள்ளைவிடுதூது
  • பிள்ளையார் கதை
தொகை நூல்
  • வரத பண்டிதம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.