being created

அ. வைத்தியநாதய்யர்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
{{being created}}
{{being created}}


'''அ. வைத்தியநாதய்யர்''' ( )  சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர்,  மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
'''அ. வைத்தியநாதய்யர்''' ( 1890 - பிப்ரவரி 23,1955)  சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர்,  மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.  


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அ. வைத்தியநாதய்யர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள விஷ்ணம்பேட்டையில் அருணாசலம் அய்யர் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். பின்னர் இவரின் குடும்பம் மதுரைக்குக் குடியேறியது. அ. வைத்தியநாதய்யர் மதுரையில் மகாகவி பாரதியார் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். அரசாங்க உதவித்தொகையோடு மேற்கல்வி பயின்றார். மதுரையிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்.  சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டத்தில்  விபின் சந்திர பாலின் சொற்பொழிவினைக் கேட்டு இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தார். வழங்கறிஞராகப் பணியாற்றினார்.
அ. வைத்தியநாதய்யர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள விஷ்ணம்பேட்டையில் அருணாசலம் அய்யர் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். பின்னர் இவரின் குடும்பம் மதுரைக்குக் குடியேறியது. அ. வைத்தியநாதய்யர் மதுரையில் மகாகவி பாரதியார் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். அரசாங்க உதவித்தொகையோடு மேற்கல்வி பயின்றார். மதுரையிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்.  சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டத்தில்  விபின் சந்திர பாலின் சொற்பொழிவினைக் கேட்டு இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தார்.  


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
அ. வைத்தியநாதய்யரின் மனைவி பெயர் அகிலாண்டத்தம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று மகன்கள் மற்றும் சுலோசனா, சாவித்திரி என்ற இரண்டு மகள்கள்.  
அ. வைத்தியநாதய்யரின் மனைவி பெயர் அகிலாண்டத்தம்மாள். இவர் 1899இல் பிறந்தவர். இத்தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று மகன்கள் மற்றும் சுலோசனா, சாவித்திரி என்ற இரண்டு மகள்கள். இவர் வழங்கறிஞராகப் பணியாற்றினார்.  


== பொதுவாழ்க்கை ==
== பொதுவாழ்க்கை ==
இவர் 1947முதல் 1952 வரை மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து இவர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்குக் காவல்துறையினர் இவரைப் புளிய மிளாறினால் அடித்தனர், சிறையில் அடைத்தனர்.  இவர் அபராதத் தொகையைச் செலுத்த மறுத்தார். இவரின் காரை அரசாங்கள் ஏலம் விட்டது. அதை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை. 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்து சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் இவரைப் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பிடித்துச் சென்றனர். இவரின் இரண்டாவது மகன் வை. சங்கரன் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரைக் காவல்துறையினர் ஆறுமாதம் அலிப்பூர் சிறையில் அடைத்தனர். அ. வைத்தியநாதய்யரின் மனைவி அகிலாண்டத்தம்மாளும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர். அ. வைத்தியநாதய்யரின் தம்பியும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர்தான்.
இவர் 1947முதல் 1952 வரை மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து இவர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்குக் காவல்துறையினர் இவரைப் புளிய மிளாறினால் அடித்து அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று, சிறையில் அடைத்தனர்.  இவர் அபராதத் தொகையைச் செலுத்த மறுத்தார். இவரின் காரை அரசாங்கள் ஏலம் விட்டது. அதை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை.  


== இலக்கிய இடம் ==
இவர் அலிப்பூர் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார்.  தன் மகன் இறுதிச் சடங்கில் இவரால் பங்கேற்க முடியவில்லை.


== நூல்கள் ==
1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்து சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் இவரைப் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பிடித்துச் சென்றனர்.


== விருதுகள் ==
அ. வைத்தியநாதய்யரின் மனைவி அகிலாண்டத்தம்மாளும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர். இவர் 1932, 1933இல் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் சிறைதண்டனையைப் பெற்றார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். அ. வைத்தியநாதய்யரின் தம்பியும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர்தான். அ. வைத்தியநாதய்யரின் இரண்டாவது மகன் வை. சங்கரன் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரைக் காவல்துறையினர் ஆறுமாதம் அலிப்பூர் சிறையில் அடைத்தனர்.
 
== ஆலயநுழைவுப் போராட்டம் ==
மதுரைக்கோவில் கிழக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் நுழைய இரண்டு வழிகள் உண்டு.  அதில் ஒன்று ஸ்ரீ அஷ்ட சக்தி மண்டபத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைவது.  முன்பு பெருந்தெய்வ இந்துக் கோவிலுக்குள் நுழைய உயர்சாதியினரைத் தவிர பிற சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிரிட்டிஷ்காரர்களைக் கோவிலுக்குள் அனுமதித்தனர். ஆனால், சந்நிதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
 
“கோவிலுக்குள் நுழையும் உரிமையை அனைவரும் பெறவேண்டும்” என்று மகாத்மா காந்தியடிகள் உறுதிபடக் கூறினார். அந்த உரிமையை மறுக்கும் கோவில்களுக்குள் தாம் நுழையாமல் இருந்தார். அதுபோலவே மதுரை வரும்போதெல்லாம் இக்கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்தும் வந்தார். கி.பி. 1937 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தபோதும் அவர் இக்கோவிலுக்குள் செல்லவில்லை.
 
தாழ்த்தப்பட்டோர் இணைந்து தமிழக அளவில் ‘ஆலய நுழைவுப் போராட்டம்’ நடத்தினர். அப்போராட்டத்தை மதுரையில் முன்னின்று நடத்தியவர்    அ. வைத்தியநாதய்யர்.  இவர் தாழ்த்தப்பட்டோர் சிலரை அழைத்துக்கொண்டு ஜூலை 8, 1939இல் மதுரைக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் வழியாகச் சென்று, அருள்மிகு அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.  இதனால் கோபங்கொண்ட உயர்சாதியினர், “இந்த இழி செயலால் அன்னை மீனாட்சி கோவிலைவிட்டு வெளியேறிவிட்டாள்” என்று கூறி, மதுரைத் தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள நடேசய்யர் பங்களாவில், சிறிய அளவில் அன்னை மீனாட்சிக்குத் தனியாகக் கோவில் அமைத்து, சிறு சிலையை பிரதிஷ்டைசெய்து, பூஜை செய்யத் தொடங்கினர். அப்போது சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியாக இருந்த மூதறிஞர் ராஜாஜி ‘ஆலயநுழைவு உரிமை’ சார்ந்து கவர்னர் வழியாக, ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது,  செப்டம்பர்1939 இல் நிரந்தரச் சட்டமாக அமலுக்கு வந்தது.  ஆனாலும், அர்ச்சகர்கள் மதுரைக்கோவிலில் பூஜை செய்யவில்லை. சட்டத்தை மீறி, தொடர்ந்து கி.பி. 1945 ஆம் ஆண்டு வரை, நடேசய்யர் பங்களாவில்தான் அருள்மிகு அன்னை மீனாட்சிக்கு பூஜை செய்து வந்தனர். பின்னர் சமாதானமடைந்து, மீண்டும் மதுரைக்கோவிலிலேயே பூஜையைச் செய்ய முன்வந்தனர்.  அதன் பின்னர்தான் மகாத்மா காந்தியடிகள் மீண்டும் மதுரைக்கு வருகை தந்தார். அவர் டிசம்பர் 4,1946 இல் இக்கோவிலுக்குள் சென்றார்.
 
== நினைவுகள் ==
ஒவ்வொரு ஆண்டும் அ. வைத்தியநாதய்யரின் நினைவு நாளன்று அவரது உருவப்படத்தை ஏந்தி, அம்மன் சந்நிதியிலிருந்து சித்திரை வீதிகள் வழியாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தோர் ஊர்வலமாகச் செல்வதுண்டு.
 
சிம்மக்கல் பகுதியில் ஒரு பூங்கா அமைத்து அதற்கு இவரின் பெயரை வைத்தனர். அந்தப் பூங்கா 1967இல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மாவட்ட மைய பொது நூலகம் உருவாக்கப்பட்டது.
 
அ. வைத்தியநாதய்யரின் சிலையை ஆகஸ்ட் 26,1973இல் மதுரைக்கோவிலுக்கு அருகில் நிறுவினர்.
 
மதுரை மாநகராட்சி வார்டு எண் 10 இல் உள்ள ஒரு சாலைக்கு அ. வைத்தியநாதய்யரின் பெயரை வைத்துள்ளனர்.
 
இந்திய அரசு அ. வைத்தியநாதய்யருக்குத் தபால்தலையை வெளியிட்டுள்ளது.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>

Revision as of 21:43, 10 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


அ. வைத்தியநாதய்யர் ( 1890 - பிப்ரவரி 23,1955) சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர், மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

அ. வைத்தியநாதய்யர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள விஷ்ணம்பேட்டையில் அருணாசலம் அய்யர் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். பின்னர் இவரின் குடும்பம் மதுரைக்குக் குடியேறியது. அ. வைத்தியநாதய்யர் மதுரையில் மகாகவி பாரதியார் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். அரசாங்க உதவித்தொகையோடு மேற்கல்வி பயின்றார். மதுரையிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் விபின் சந்திர பாலின் சொற்பொழிவினைக் கேட்டு இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தார்.

தனிவாழ்க்கை

அ. வைத்தியநாதய்யரின் மனைவி பெயர் அகிலாண்டத்தம்மாள். இவர் 1899இல் பிறந்தவர். இத்தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று மகன்கள் மற்றும் சுலோசனா, சாவித்திரி என்ற இரண்டு மகள்கள். இவர் வழங்கறிஞராகப் பணியாற்றினார்.

பொதுவாழ்க்கை

இவர் 1947முதல் 1952 வரை மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து இவர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்குக் காவல்துறையினர் இவரைப் புளிய மிளாறினால் அடித்து அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று, சிறையில் அடைத்தனர். இவர் அபராதத் தொகையைச் செலுத்த மறுத்தார். இவரின் காரை அரசாங்கள் ஏலம் விட்டது. அதை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை.

இவர் அலிப்பூர் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். தன் மகன் இறுதிச் சடங்கில் இவரால் பங்கேற்க முடியவில்லை.

1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்து சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் இவரைப் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

அ. வைத்தியநாதய்யரின் மனைவி அகிலாண்டத்தம்மாளும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர். இவர் 1932, 1933இல் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் சிறைதண்டனையைப் பெற்றார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். அ. வைத்தியநாதய்யரின் தம்பியும் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர்தான். அ. வைத்தியநாதய்யரின் இரண்டாவது மகன் வை. சங்கரன் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரைக் காவல்துறையினர் ஆறுமாதம் அலிப்பூர் சிறையில் அடைத்தனர்.

ஆலயநுழைவுப் போராட்டம்

மதுரைக்கோவில் கிழக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் நுழைய இரண்டு வழிகள் உண்டு. அதில் ஒன்று ஸ்ரீ அஷ்ட சக்தி மண்டபத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைவது. முன்பு பெருந்தெய்வ இந்துக் கோவிலுக்குள் நுழைய உயர்சாதியினரைத் தவிர பிற சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிரிட்டிஷ்காரர்களைக் கோவிலுக்குள் அனுமதித்தனர். ஆனால், சந்நிதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

“கோவிலுக்குள் நுழையும் உரிமையை அனைவரும் பெறவேண்டும்” என்று மகாத்மா காந்தியடிகள் உறுதிபடக் கூறினார். அந்த உரிமையை மறுக்கும் கோவில்களுக்குள் தாம் நுழையாமல் இருந்தார். அதுபோலவே மதுரை வரும்போதெல்லாம் இக்கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்தும் வந்தார். கி.பி. 1937 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தபோதும் அவர் இக்கோவிலுக்குள் செல்லவில்லை.

தாழ்த்தப்பட்டோர் இணைந்து தமிழக அளவில் ‘ஆலய நுழைவுப் போராட்டம்’ நடத்தினர். அப்போராட்டத்தை மதுரையில் முன்னின்று நடத்தியவர்    அ. வைத்தியநாதய்யர். இவர் தாழ்த்தப்பட்டோர் சிலரை அழைத்துக்கொண்டு ஜூலை 8, 1939இல் மதுரைக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் வழியாகச் சென்று, அருள்மிகு அன்னை மீனாட்சியைத் தரிசித்தார். இதனால் கோபங்கொண்ட உயர்சாதியினர், “இந்த இழி செயலால் அன்னை மீனாட்சி கோவிலைவிட்டு வெளியேறிவிட்டாள்” என்று கூறி, மதுரைத் தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள நடேசய்யர் பங்களாவில், சிறிய அளவில் அன்னை மீனாட்சிக்குத் தனியாகக் கோவில் அமைத்து, சிறு சிலையை பிரதிஷ்டைசெய்து, பூஜை செய்யத் தொடங்கினர். அப்போது சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியாக இருந்த மூதறிஞர் ராஜாஜி ‘ஆலயநுழைவு உரிமை’ சார்ந்து கவர்னர் வழியாக, ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது, செப்டம்பர்1939 இல் நிரந்தரச் சட்டமாக அமலுக்கு வந்தது. ஆனாலும், அர்ச்சகர்கள் மதுரைக்கோவிலில் பூஜை செய்யவில்லை. சட்டத்தை மீறி, தொடர்ந்து கி.பி. 1945 ஆம் ஆண்டு வரை, நடேசய்யர் பங்களாவில்தான் அருள்மிகு அன்னை மீனாட்சிக்கு பூஜை செய்து வந்தனர். பின்னர் சமாதானமடைந்து, மீண்டும் மதுரைக்கோவிலிலேயே பூஜையைச் செய்ய முன்வந்தனர். அதன் பின்னர்தான் மகாத்மா காந்தியடிகள் மீண்டும் மதுரைக்கு வருகை தந்தார். அவர் டிசம்பர் 4,1946 இல் இக்கோவிலுக்குள் சென்றார்.

நினைவுகள்

ஒவ்வொரு ஆண்டும் அ. வைத்தியநாதய்யரின் நினைவு நாளன்று அவரது உருவப்படத்தை ஏந்தி, அம்மன் சந்நிதியிலிருந்து சித்திரை வீதிகள் வழியாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தோர் ஊர்வலமாகச் செல்வதுண்டு.

சிம்மக்கல் பகுதியில் ஒரு பூங்கா அமைத்து அதற்கு இவரின் பெயரை வைத்தனர். அந்தப் பூங்கா 1967இல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மாவட்ட மைய பொது நூலகம் உருவாக்கப்பட்டது.

அ. வைத்தியநாதய்யரின் சிலையை ஆகஸ்ட் 26,1973இல் மதுரைக்கோவிலுக்கு அருகில் நிறுவினர்.

மதுரை மாநகராட்சி வார்டு எண் 10 இல் உள்ள ஒரு சாலைக்கு அ. வைத்தியநாதய்யரின் பெயரை வைத்துள்ளனர்.

இந்திய அரசு அ. வைத்தியநாதய்யருக்குத் தபால்தலையை வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

[[Category:Tamil Content]]