first review completed

வி. சின்னத்தம்பிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
Line 17: Line 17:
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 19:31, 23 December 2022

வி. சின்னத்தம்பிப் புலவர் (1716-1780) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி. சின்னத்தம்பிப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் வில்லவராய முதலியார்-ன் மகனாக 1716-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வி. சின்னத்தம்பிப் புலவர் இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். வீதியில் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது "வில்லவராய முதலியார் வீடு எது?” என வினவிய புலவருக்கு கவிபாடினார் என நம்பப்படுகிறது. தந்தை ஒரு செய்யுளின் முதலிரண்டு அடிகளையும் இயற்றிவைத்துவிட்டு வெளியே சென்று திரும்பி வந்துபோது இவரே பின்னிரண்டு அடிகளையும் பாடினார் என்றும் கூறுவர். பிரபந்தங்கள் பாடினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பல பாடினார்.

மறைவு

வி. சின்னத்தம்பிப் புலவர் 1780-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மறைசையந்தாதி
  • கல்வளையந்தாதி
  • கரவை வேலன் கோவை
  • பருளைப் பள்ளு

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.