being created

மங்கையர் மலர்: Difference between revisions

From Tamil Wiki
Line 4: Line 4:
மங்கையர் மலர் இதழ் [[கல்கி (வார இதழ்)|கல்கி]] குழுமத்தில் இருந்து 1994 முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன வெளியீடு (Bharathan Publications in Chennai, Tamilnadu.)
மங்கையர் மலர் இதழ் [[கல்கி (வார இதழ்)|கல்கி]] குழுமத்தில் இருந்து 1994 முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன வெளியீடு (Bharathan Publications in Chennai, Tamilnadu.)
== வரலாறு ==
== வரலாறு ==
1981-ல் சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை 'கல்கி' குழுமம் எடுத்து நடத்த முடிவு செய்தது. கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்தார் 'கல்கி' ராஜேந்திரன். இருபத்து நான்கரை ஆண்டுகள் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து திறம்பட நடத்தினார் மஞ்சுளா ரமேஷ். அப்போதைய கல்கி குழும இயக்குநர் முரளியின் நிர்வாக ஆளுமையும், விற்பனை மேலாளர் சந்திரமௌலியின் தீவிர உழைப்பும் வித்தாக இருந்ததில், மங்கையர் மலர் பெரியதொரு ஆலமரம்போல் விரிந்து, பத்திரிகை உலகில் உறுதியான இடத்தைப் பிடித்து தடம்பதித்தது. மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ஆசிரியர் பொறுப்பேற்ற ரேவதி சங்கரன் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலம் மங்கையர் மலரின் வெள்ளி விழா தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்து வருகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும், 'கல்கி' ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன். இவரது தலைமையின் கீழ், மங்கையர் மலர், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன். வாசகர்களை படைப்பாளர்காக உயர்த்தி, 2013 பிப்ரவரி முதல், புதுப்பொலிவுடன், புதிய வடிவத்தில், உருமாறியது மங்கையர் மலர். 2013 செப்டெம்பர் முதல் 'மாதம் இருமுறை' இதழாக மலர்ந்தது. 2015 முதல் தற்போது வரை (2020) எஸ். மீனாட்சி, பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதிலும், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும்கூட வாசகர் சந்திப்புகளை நடத்தி, அவர்களின் தேவைக் கேற்ற செய்திகளையும், கதை, கட்டுரைகளையும் வழங்கி அழகான ஆளுமையுடன் மங்கையரை வழி நடத்தி வருகிறது மங்கையர் மலர். பிப்ரவரி 2020 ல் தனது 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மங்கையர் மலர், செப்டெம்பர் 2021 முதல் www.kalkionline.com இணையதளத்தில் கல்கி குழுமம் வெளியிடும் மின்னிதழாக மலர்கிறது.
1981-ல் கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்த 'கல்கி' ராஜேந்திரன் சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை எடுத்து நடத்த முடிவு செய்தார். இருபத்து நான்கரை ஆண்டுகள் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மங்கையர் மலரை நடத்தினார் மஞ்சுளா ரமேஷ். அப்போது கல்கி குழும இயக்குநராக முரளி, விற்பனை மேலாளராக சந்திரமௌலியும் இருந்தார். மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ரேவதி சங்கரன் ஒரு வருட காலம் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும்,'கல்கி' ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன் மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்து வருகிறார்.  
 
மங்கையர் மலர் 2013 பிப்ரவரி முதல் புதிய வடிவத்தில் உருமாறியது. 2013 செப்டெம்பர் முதல் 'மாதம் இருமுறை' இதழாக வந்ததது. 2015 முதல் எஸ். மீனாட்சி பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார். செப்டெம்பர் 2021 முதல் www.kalkionline.com இணையதளத்தில் கல்கி குழுமம் வெளியிடும் மின்னிதழாக ஆனது.
 
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைத் தலைப்புகளை உள்ளடக்கியது.
மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைத் தலைப்புகளை உள்ளடக்கியது.

Revision as of 17:11, 13 December 2022

மங்கையர் மலர்

மங்கையர் மலர் பெண்களுக்கான தமிழ் மாத இதழ். கல்கி குழுமத்தில் இருந்து இந்த இதழ் வெளிவருகிறது. பெண்களுக்கான கதை கட்டுரைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வெளியிடுகிறது.

வெளியீடு

மங்கையர் மலர் இதழ் கல்கி குழுமத்தில் இருந்து 1994 முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன வெளியீடு (Bharathan Publications in Chennai, Tamilnadu.)

வரலாறு

1981-ல் கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்த 'கல்கி' ராஜேந்திரன் சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை எடுத்து நடத்த முடிவு செய்தார். இருபத்து நான்கரை ஆண்டுகள் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மங்கையர் மலரை நடத்தினார் மஞ்சுளா ரமேஷ். அப்போது கல்கி குழும இயக்குநராக முரளி, விற்பனை மேலாளராக சந்திரமௌலியும் இருந்தார். மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ரேவதி சங்கரன் ஒரு வருட காலம் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும்,'கல்கி' ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன் மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்து வருகிறார்.

மங்கையர் மலர் 2013 பிப்ரவரி முதல் புதிய வடிவத்தில் உருமாறியது. 2013 செப்டெம்பர் முதல் 'மாதம் இருமுறை' இதழாக வந்ததது. 2015 முதல் எஸ். மீனாட்சி பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார். செப்டெம்பர் 2021 முதல் www.kalkionline.com இணையதளத்தில் கல்கி குழுமம் வெளியிடும் மின்னிதழாக ஆனது.

உள்ளடக்கம்

மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைத் தலைப்புகளை உள்ளடக்கியது.

கட்டுரைகள்

மகளிருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், சமுதாயத்தில் பெண்கள் முன்னேறுவதற்கரிய கருத்துகள், தன் வாழ்வில் அவ்வாறு முன்னேறியவர்களின் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்கள், மகளிருக்குப் பயன்படும் மருத்துவக் குறிப்புகள் ஆகிய கட்டுரைகள் வெளிவந்தன. சமூக நலம், பொருளாதாரம், கலை, விளையாட்டு, சமயக் கட்டுரைகள் ஆகியவை வெளிவந்தன.

இலவச இணைப்பு

நவராத்திரி , பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பு வழங்கப்படும். இவை கட்டுரை, துணுக்கு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல நூல் அமைப்பிலேயே வெளிவந்தன

இலக்கிய இடம்

”மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது” என முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.