ப.முத்துக்குமாரசுவாமி (இசையறிஞர்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) தமிழ் மரபிசை அறிஞர், இசை ஆசிரியர். பண்ணியல், தமிழிசைமரபு ஆகியவற்றில் ஆய்வுசெய்தவர். தமிழிசை அறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகரின் மாணவர்
ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) தமிழ் மரபிசை அறிஞர், இசை ஆசிரியர். பண்ணியல், தமிழிசைமரபு ஆகியவற்றில் ஆய்வுசெய்தவர். தமிழிசை அறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகரின் மாணவர்


பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
ப. முத்துக்குமாரசுவாமியின்  முன்னோர்கள் காஞ்சீபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேறியவர்கள் .இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா இணையருக்கு 23 ஆகஸ்ட் 1932 ல் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் கல்வியை முடித்தபின் 1950ல்  இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசைமாணாக்கராகச் சேர்ந்தார். அங்கே எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவராக ஆனார்.


இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணத்தில் முடித்தபின்னர், 1950 களின் பிற்பகுதியில் இந்தியாவுக்குச் சென்று அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இசைத்துறையில் மாணவராகச் சேர்ந்தார். அங்கே எம். எம். தண்டபாணி தேசிகர் இவருக்கு ஆசிரியராக வாய்த்தார். தண்டபாணி தேசிகர் இந்து சமய துதிப்பாடல்களையும் தமிழ் கிருதிகளையும் பாடுவதில் வல்லவராக இருந்தார். முத்துக்குமாரசுவாமி தனது குருவைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்கள் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
முத்துக்குமாரசுவாமி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின் யாழ்ப்பாணம் சென்று அங்கே அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணியாற்றினார். இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டதையடுத்து 1986 ஆம் ஆண்டு  குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்து அண்ணாமலை பல்கலை கழகத்தில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். தன் 86 வயதுவரை கௌரவப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்


இசைப்பணி
== இசைப்பணி ==
ப. முத்துக்குமாரசுவாமி அவரது என்பதால் இவரது இப்போதைய வருகையை தாயகம் திரும்பினார் என்று சொல்லலாம்.


சென்னை சங்கீத சபாக்களிலும், தனி நிகழ்ச்சிகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளித்து வந்தார். சுதா ரகுநாதன் உட்பட்ட சில பிரபல இசைக் கலைஞர்கள் இவரிடம் தமிழ் கிருதிகள் பயின்றனர். தனது 86 ஆவது வயது வரை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பணி புரிந்தார்.
தண்டபாணி தேசிகரின் பிரதம சீடர் என்ற வகையில் 2008 ஆம் ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு சமயத்தில் சென்னையில் பல சபாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் தேசிகரின் நினைவு நாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார். தேசிகர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடிய பாடல்களை முத்துக்குமாரசுவாமி பிரபலப்படுத்தினார்.
சுதா ரகுநாதன் இவரைப் பற்றிக் கூறுகையில், "எப்போதாவது நான் ஒரு தமிழ்க் கிருதியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் முத்துக்குமாரசுவாமி உடனே உதவுவார். தனது அறிவைப் பகிர்ந்துகொள்வதில் அவரைப் போலத் தாராள மனம் கொண்ட இசைக் கலைஞர்களை நான் கண்டதில்லை" என்று சொன்னார்.
== இசைப்பணி ==
உசாத்துணை
உசாத்துணை

Revision as of 09:35, 11 December 2022

ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) தமிழ் மரபிசை அறிஞர், இசை ஆசிரியர். பண்ணியல், தமிழிசைமரபு ஆகியவற்றில் ஆய்வுசெய்தவர். தமிழிசை அறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகரின் மாணவர்

பிறப்பு, கல்வி

ப. முத்துக்குமாரசுவாமியின் முன்னோர்கள் காஞ்சீபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேறியவர்கள் .இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா இணையருக்கு 23 ஆகஸ்ட் 1932 ல் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் கல்வியை முடித்தபின் 1950ல் இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசைமாணாக்கராகச் சேர்ந்தார். அங்கே எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவராக ஆனார்.

தனிவாழ்க்கை

முத்துக்குமாரசுவாமி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின் யாழ்ப்பாணம் சென்று அங்கே அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணியாற்றினார். இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டதையடுத்து 1986 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்து அண்ணாமலை பல்கலை கழகத்தில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். தன் 86 வயதுவரை கௌரவப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்

இசைப்பணி

ப. முத்துக்குமாரசுவாமி அவரது என்பதால் இவரது இப்போதைய வருகையை தாயகம் திரும்பினார் என்று சொல்லலாம்.

சென்னை சங்கீத சபாக்களிலும், தனி நிகழ்ச்சிகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளித்து வந்தார். சுதா ரகுநாதன் உட்பட்ட சில பிரபல இசைக் கலைஞர்கள் இவரிடம் தமிழ் கிருதிகள் பயின்றனர். தனது 86 ஆவது வயது வரை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

தண்டபாணி தேசிகரின் பிரதம சீடர் என்ற வகையில் 2008 ஆம் ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு சமயத்தில் சென்னையில் பல சபாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் தேசிகரின் நினைவு நாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார். தேசிகர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடிய பாடல்களை முத்துக்குமாரசுவாமி பிரபலப்படுத்தினார்.

சுதா ரகுநாதன் இவரைப் பற்றிக் கூறுகையில், "எப்போதாவது நான் ஒரு தமிழ்க் கிருதியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் முத்துக்குமாரசுவாமி உடனே உதவுவார். தனது அறிவைப் பகிர்ந்துகொள்வதில் அவரைப் போலத் தாராள மனம் கொண்ட இசைக் கலைஞர்களை நான் கண்டதில்லை" என்று சொன்னார்.

இசைப்பணி

உசாத்துணை