ச.வைத்தியலிங்கம்பிள்ளை: Difference between revisions
No edit summary |
|||
Line 47: | Line 47: | ||
* ''சிவராத்திரி புராணம்'' | * ''சிவராத்திரி புராணம்'' | ||
== உசாத்துணை == | |||
https://valvettiturai.com/pulavar.php | * https://www.valvettiturai.org/valvaipattidetails.php?id=25 | ||
* https://valvettiturai.com/pulavar.php | |||
http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#57 | * http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#57 |
Revision as of 19:43, 8 February 2022
ச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 - 1901) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர். சைவ அறிஞர். பழந்தமிழ் நூல் பதிப்பாளர் மற்றும் தமிழாசிரியர். இயற்றமிழ் போதகர் என அழைக்கப்பட்டார்.
பிறப்பு, கல்வி
ச.வைத்திலிங்கம் பிள்ளை வல்வெட்டித்துறையில் பெயர் சங்கரப்பிள்ளை( சங்கரநாதப்பிள்ளை) க்கு மகனாக 1843ல் (மாசி மாதம் பூர நட்சத்திரம்) பிறந்தார். உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடம் தமிழ் பயின்றார். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.
இலக்கியப்பணி
வைத்திலிங்கம் பிள்ளை யாழ்ப்பாணத்தில் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவி சைவ, தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். அருகிலேயே தமிழிலக்கியமும் இலக்கணமும் கற்ப்பிக்கும் பாடசாலையையும் நடத்தினார்.
ச.வைத்திலிங்கம் பிள்ளை யாழ்ப்பாணம் நல்லூர் வி.சின்னத்தம்பி புலவர் எழுதிய கல்வளை அந்தாதிக்கு உரையெழுதினார். சுன்னாகம் வரத பாண்டியர் எழுதிய சிவராத்திரி புராணம் நூலை பதிப்பித்தார். 1878 இல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். 1876 ல் இவர் எழுதிய சிந்தாமணி நிகண்டு இவருடைய முதன்மை நூல்.இந்நூலுக்காக சென்னையில் சி.வை.தாமோதரம் பிள்ளை ஒரு விழா எடுத்துப் பாராட்டினார்.
கண்டன இலக்கியம்
சி.வை.தாமோதரம்பிள்ளை எழுதிய "சைவமகத்துவ விளக்கம்" நூலுக்கு எழுந்த கண்டன நூலான சைவ மகத்துவ ஆபாச விளக்கம் என்னும் நூலை மறுத்து "சைவமகத்துவ பானு அல்லது சைவ மகத்துவ ஆபாச விளக்க மறுப்பு’ என்னும் நூலை எழுதியவர்.
மாணவர்கள்
மட்டக்களப்பு வித்வான் ச.பூபாலபிள்ளை இவரது மாணவர். உடுப்பிட்டி போதகர் ரெவெ.ஹோலண்ட் (Rev.Hoaland) இவரிடம் தமிழ் கற்றார். சி.ஆறுமுகம் பிள்ளை (அப்புக்குட்டி உபாத்யாயர்) போன்றவர்கள் இவரது புகழ்பெற்ற மாணவர்கள்
இதழியல்
சைவ அபிமானி என்ற பத்திரிகையை பாரதி நிலைய முத்திராக்ஷர சாலை அச்சகம் வெளியீடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். வல்வை மாணவன் என்றா பெயரில் அதில் கட்டுரைகள் எழுதினார்
மறைவு
3-செப்டெம்பர்-1901 ல்(ஆவணிமாதம் மூலம் நட்சத்திரம்) மறைந்தார்
இலக்கிய இடம்
ச.வைத்திலிங்கம் பிள்ளை யாழ்பாணம் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் இலங்கையில் உருவான சைவமீட்பு இயக்கம் மற்றும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர்
நூல்கள்
எழுதியவை
- செல்வச் சந்நிதி முறை
- சிந்தாமணி நிகண்டு (1876)
- வல்வை வைத்தியேசர் பதிகம்
- வல்வை வைத்தியேசர் ஊஞ்சல்
- சாதி நிர்ணய புராணம்
- சைவ மாகாத்மியம்
- கள்ளுகுடி சிந்து (இரண்டு பாகங்கள்)
- மாதரொழுக்க தங்கச் சிந்து.
- கணிதசாரம்
உரைகள்
- கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
- தெய்வயானை திருமணப்படலவுரை
- வள்ளியம்மை திருமணப்படலவுரை
- சூரபத்மன் வதைப்படலம்
- சிவராத்திரி புராணம்