under review

கிங்ஸ்டன்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 1: Line 1:
[[File:கிங்ஸ்டன்.jpg|thumb|கிங்ஸ்டன்]]
[[File:கிங்ஸ்டன்.jpg|thumb|கிங்ஸ்டன்]]
கிங்ஸ்டன் : மலேசிய நாட்டாரியலாளர். கல்லூரிப்பேராசிரியர், தமிழாய்வாளர்.ஜூன் 23, 1979
கிங்ஸ்டன் (ஜூன் 23, 1979)நாட்டாரியலாளர். கல்லூரிப்பேராசிரியர், தமிழாய்வாளர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
முனைவர் கிங்ஸ்டன் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், ஜூன் 23, 1979- ஆம் ஆண்டு பால் தம்புராஜ் மார்கரேட் சுசிலா இணையருக்குப் பிறந்தார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். பால் தம்புராஜ் திருநெல்வேலிக்காரர். அம்மா கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.  
முனைவர் கிங்ஸ்டன் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், ஜூன் 23, 1979- ஆம் ஆண்டு பால் தம்புராஜ் மார்கரேட் சுசிலா இணையருக்குப் பிறந்தார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். பால் தம்புராஜ் திருநெல்வேலிக்காரர். அம்மா கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.  

Revision as of 18:30, 1 December 2022

கிங்ஸ்டன்

கிங்ஸ்டன் (ஜூன் 23, 1979)நாட்டாரியலாளர். கல்லூரிப்பேராசிரியர், தமிழாய்வாளர்.

பிறப்பு, கல்வி

முனைவர் கிங்ஸ்டன் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், ஜூன் 23, 1979- ஆம் ஆண்டு பால் தம்புராஜ் மார்கரேட் சுசிலா இணையருக்குப் பிறந்தார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். பால் தம்புராஜ் திருநெல்வேலிக்காரர். அம்மா கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.

தன்னுடைய ஆரம்பக்கல்வியை உதகமண்டலத்திலேயே தொடங்கிய கிங்ஸ்டன் குன்னூர் உபத்தலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகக்கல்வியைத் தொடர்ந்தார். 2000-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவுச் செய்த பின் 2002-ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் தமிழியலில் முதுகலைப் பட்டப்படிப்பையும் 2004-ஆம் ஆண்டு தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பையும் முடித்தார்

2006-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மொழியியல் துறையில் நிறைவுச் செய்துள்ள கிங்ஸ்டன் 2007-ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். மீண்டும் 2012-ஆம் ஆண்டு மொழியியலில் முதுகலையை முடித்தார்

தனிவாழ்க்கை

திருமதி.லோகேஸ்வரி ஆறுமுகத்தை மணந்து கொண்ட கிங்ஸ்டனுக்குக் கபிலன் என்று ஒரு மகன்.

கோயம்புத்துரில் ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் 2007- ஆம் ஆண்டு தொடங்கி 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறை துணைப் பேராசிரியராக பணியாற்றிய கிங்ஸ்டன், 2011- ஆம் ஆண்டுத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரை மைசூரில் அமைந்துள்ள இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்திய மொழிகளின் முனையகத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது, சுல்தான் இத்ரீசு கல்வியியல் பல்கலைக்கழத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் புலத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

பணிகள்

நாளிதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றில் தமிழ் பற்றி தொடர்ச்சியாக எழுதிவரும் கிங்ஸ்டன் ஆய்வரங்கங்கள் மற்றும் மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். தொல்காப்பியம் சார்ந்து அவர் தொகுத்த “TOLKAPPIYAM ASAL USUL DAN INTIPATI KARYA AGUNG BAHASA TAMIL” குறிப்பிடத்தக்க நூல். மலேசியத் தமிழர்களின் சொல்லும் மரபும் என்ற சொல்லாராய்ச்சி நூல் முக்கிமானது மலேசியத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மலாயிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்த “நான் கிழக்கத்தியப் பெண்” (Aku Anak Timur), தமிழிலிருந்து மலாயிற்கு மொழிப்பெயர்த்த “Misteri di Dargling”,

நாட்டாரியல்

கிங்ஸ்டன் மலேசியாவில் அமைந்துள்ள 100 ஆலயங்களை நேரில் சென்று கண்டு, ஆராய்ந்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.

கல்விப்பணி

முப்பதிற்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு மேற்பார்வையாளராகவும் துணை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார் கிங்ஸ்டன்

நூல்கள்

மலாய்
  • TOLKAPPIYAM ASAL USUL DAN INTIPATI KARYA AGUNG BAHASA TAMIL
  • Misteri di Dargling
தமிழ்
  • மலேசியத் தமிழர்களின் சொல்லும் மரபும்
  • நான் கிழக்கத்தியப் பெண் (Aku Anak Timur)

உசாத்துணை


✅Finalised Page