அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: Difference between revisions
(→உரைகள்) |
(→உரைகள்) |
||
Line 7: | Line 7: | ||
== உரைகள் == | == உரைகள் == | ||
திருப்பாவை ஆறாயிரப்படி வ்யாக்யானம் - திருப்பாவைக்கு விரிவான, நுணுக்கமான உரை. எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) இறைவனின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணமுமின்றி காட்டும் கருணை), பிராட்டியின் புருஷகாரம் (அடியவனுக்காக | திருப்பாவை ஆறாயிரப்படி வ்யாக்யானம் - திருப்பாவைக்கு விரிவான, நுணுக்கமான உரை. எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) இறைவனின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணமுமின்றி காட்டும் கருணை), பிராட்டியின் புருஷகாரம் (அடியவனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார். | ||
அமலனாதிபிரான் | அமலனாதிபிரான் உரை: வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அழகுறவும் எடுத்துரைக்கப்பட்ட ஒன்றாகும் உரையாக நாயனாரின் அமலனாதிபிரான் உரை கருதப்படுகிறது.இதில் நாயனார் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானின் திருமேனியையும் நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் அழகுற இணைத்து வ்யாக்யானம் செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே திருப்பாணாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவமென்பதின் ஒரு பகுதியாக பார்த்துள்ளோம். | ||
* நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. | * நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. | ||
* நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது. | * நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது. |
Revision as of 23:45, 27 November 2022
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வைணவ ஆசாரியர்களில் ஒருவர். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதியவர். ஆசார்ய ஹிருதயத்தை இயற்றியவர்.
பிறப்பு, இளமை
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வடக்கு திருவீதி பிள்ளைக்கு, மார்கழி மாத, அவிட்ட நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் பிள்ளை லோகாசாரியார். தந்தையாரிடம் தமிழும், வடமொழியும், சமயநூல்களையும் கற்றார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருமணம் செய்துகொள்ளவில்லை.
உரைகள்
திருப்பாவை ஆறாயிரப்படி வ்யாக்யானம் - திருப்பாவைக்கு விரிவான, நுணுக்கமான உரை. எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) இறைவனின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணமுமின்றி காட்டும் கருணை), பிராட்டியின் புருஷகாரம் (அடியவனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.
அமலனாதிபிரான் உரை: வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அழகுறவும் எடுத்துரைக்கப்பட்ட ஒன்றாகும் உரையாக நாயனாரின் அமலனாதிபிரான் உரை கருதப்படுகிறது.இதில் நாயனார் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானின் திருமேனியையும் நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் அழகுற இணைத்து வ்யாக்யானம் செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே திருப்பாணாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவமென்பதின் ஒரு பகுதியாக பார்த்துள்ளோம்.
- நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது.
- நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது.
- நாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த “ஆசார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும், திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார். “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது பிள்ளை லோகாசார்யர் அருளிய “ஸ்ரீவசன பூஷணம்” என்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் தத்துவங்களை இன்னும் பரக்க விவரிக்கின்றது. நாம் முன்பே ஆசார்ய ஹ்ருதயம் மூலமாக நாயனார் அடைந்த அர்ச்சாவதார அனுபவங்களை http://ponnadi.blogspot.in/2012/11/archavathara-anubhavam-nayanar-anubhavam.html என்பதில் பார்த்துள்ளோம்.
சிறப்புகள்
மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலை 47வது பாசுரத்தில் நாயனாரையும் அவருடைய க்ரந்தங்களையும் கீழ்வருமாறு சிறப்பித்திருக்கிறார்.
நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையேதம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.