நெ.வை. செல்லையா: Difference between revisions
No edit summary |
|||
Line 14: | Line 14: | ||
* இரமண மகரிஷி பஞ்சரத்தினம் | * இரமண மகரிஷி பஞ்சரத்தினம் | ||
* ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை | * ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை | ||
* | * தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி வடிவேலர் பதிகம் | ||
* ஒழுக்க மஞ்சரி | * ஒழுக்க மஞ்சரி | ||
* கதிரை நான் மணிமாலை | * கதிரை நான் மணிமாலை | ||
Line 27: | Line 27: | ||
* வண்ணைத் திருமகள் பதிகம் | * வண்ணைத் திருமகள் பதிகம் | ||
* வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் | * வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை |
Revision as of 07:08, 24 November 2022
நெ.வை. செல்லையா (1878-1940) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
நெ.வை. செல்லையா யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் வைத்தியலிங்கம், சீனியம்மாள் இணையருக்கு 1878இல் பிறந்தார். இளமையில் வண்ணார் பண்ணை பாடசாலையில் கல்வி பயின்றார். ந.ச. பொன்னம்பலம் பிள்ளையிடம் புராணங்கள், இலக்கியங்கள் இலக்கணங்களைக் கற்றார்.
ஆசிரியப்பணி
1925இல் சிங்கப்பூர் சென்று ஈப்போ நகரில் திருவள்ளுவர் கலாசாலையின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்குத் திரும்பி வந்து, கொழும்பு நகரில் கல்வி கற்பித்தார்.
இலக்கிய வாழ்க்கை
நெ.வை. செல்லையா நூல்களை எழுதுவோருக்கும் நூல்களைப் பதிப்பிப்போருக்கும் உதவி செய்தார். யாழ்ப்பாண வரலாற்றினைத் ஆராய்ந்துகொண்டிருந்த முதலியார் செ. இராசநாயகம் அவர்களுக்கு உதவிகள் செய்து ஆராய்ச்சித்துறை சிறப்பெய்துமாறு தொண்டாற்றினார். இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் அக்காலத்து இலக்கிய இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளிவந்தன. நூல்கள் பல எழுதினார்.
மறைவு
நெ.வை. செல்லையா 1940இல் காலமானார்.
நூல் பட்டியல்
- அரிநாம தோதீ திரம்
- ஆத்மாநுபவ தீபிகை
- ஆராய்ச்சிக் கட்டு ரைகள்
- இரமண மகரிஷி பஞ்சரத்தினம்
- ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை
- தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி வடிவேலர் பதிகம்
- ஒழுக்க மஞ்சரி
- கதிரை நான் மணிமாலை
- காந்தி இயன்மொழி வாழ்த்து
- திருமால் அவதார நாமாவளி
- நல்லைச் சண்முக மாலை
- நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம்
- நாவலர் பதிகம்
- பாலர் பாடல்
- மதுவிலக்குப் பாட்டு
- வடிவேலர் திருவிருத்தம்
- வண்ணைத் திருமகள் பதிகம்
- வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.