first review completed

சிவசம்புப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 45: Line 45:
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்: நூலகம்
* ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்: நூலகம்
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:49, 9 November 2022

சிவசம்புப்புலவர் சரித்திரம்

சிவசம்புப்புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவசம்புப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் அருளம்பல முதலியார், கதிராசியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். நல்லூர்ச் சரவணமுத்துப்புலவர், நல்லூர்ச்சம்பந்தப்புலவர் ஆகியோரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சிவசம்புப்புலவர் இளமையில் கவிபாடும் திறன் பெற்றிருந்தார். ஈழநாட்டில் பிரபந்தம் பாடிய புலவர்களுள் மிகுதியான பிரபந்தங்களைப் பாடினார். இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதிமீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடினார். பாண்டித்துரைத்தேவர் மீது நான்மணிமாலை பாடினார்.

மாணவர்கள்
  • ச. வயித்தியலிங்கபிள்ளை
  • புலோலியூர் ம. தில்லை நாதநாவலர்
  • புலோலியூர் வ. குமாரசுவாமிப்புலவர்
  • அ. வேல்மயில்வாகனஞ் செட்டியார்
  • புலோலியூர் ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்
  • வ. கணபதிப்பிள்ளை
  • பூ. முருகேசப்பண்டிதர்
  • க. நமச்சிவாயப்பிள்ளை
  • ஆறுமுக நொத்தாரிசு

பட்டம்

ஆறுமுக நாவலர் சிவசம்புப்புலவருக்கு ‘புலவர்’ பட்டம் வழங்கினர்.

மறைவு

சிவசம்புப்புலவர் செப்டம்பர் 29, 1910-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மயில்வாகனவம்ச வைபவம்
  • பாஸ்கரசேதுபதி கல்லாடக் கலித்துறை
  • பாஸ்கரசேதுபதி நான்மணிமாலை
  • பாஸ்கரசேதுபதி இரட்டைமணி மாலை
  • பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை
  • கந்தவனநாதர் பதிகம்
  • வல்லிபுரநாதர் பதிகம்
  • செந்தில்யமகவந்தாதி (1888, வல்வை)
  • திருவேரக அந்தாதி
  • எட்டிக்குடிப் பிரபந்தம்
  • புலோலிநான்மணிமாலை (1889, வல்வை)
  • திருச்செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை)
  • மறைசை நான்மணிமாலை
  • கதிர்காம வெண்பா
  • கண்டிக்கதிரேசன் பதிகம்
  • திரிகோணமலை வில்லூன்றி நான்மணிமாலை
உரைகள்
  • மறைசையந்தாதியுரை (1893)
  • யாப்பருங்கலக்காரிகை
  • கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப்படலம்
இவரைப்பற்றிய நூல்கள்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்: நூலகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.