சுப்பு ஆறுமுகம்: Difference between revisions
Line 48: | Line 48: | ||
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/villupaattu-exponent-subbu-arumugam-no-more/article65991589.ece Villupaattu exponent Subbu Arumugam: the hindu] | * [https://www.thehindu.com/news/national/tamil-nadu/villupaattu-exponent-subbu-arumugam-no-more/article65991589.ece Villupaattu exponent Subbu Arumugam: the hindu] | ||
* [https://www.vikatan.com/spiritual/celebrity/93668- வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: விகடன்] | * [https://www.vikatan.com/spiritual/celebrity/93668- வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: விகடன்] | ||
* இதிகாசங்களை பாமரனுக்கு கொண்டு சேர்த்தது வில்லுபாட்டு: thirukkannapurathaan | |||
[[Category:Being Created]] | [[Category:Being Created]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 14:45, 11 October 2022
சுப்பு ஆறுமுகம் (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர். தேசபக்தி, புராணங்கள், விழிப்புணர்வு சார்ந்த வில்லிசைப்பாடல்கள் அரங்காற்றுகை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி, சத்திரபுதுக்குளத்தில் ஆ. சுப்பையாபிள்ளை, சுப்பம்மாள் இணையருக்கு ஜுன் 28, 1928-ல் கடைசி மகனாகப் பிறந்தார். அப்பா சுப்பையாபிள்ளை இசைக்கலைஞர், பொம்மை தொழில் செய்தவர், ஆசுகவி. சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படித்தார். மதுரை தமிழ்ச்சங்கம்’ அமைப்பில் மூன்று ஆண்டுகள் தமிழ்மொழி படித்தார். இராம அய்யர், நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சுப்பு ஆறுமுத்தின் தமிழ் ஆசிரியர்கள். தந்தையிடமிருந்து இசை பயின்றார். பேலூர் மடம் ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தாஜி மகராஜ் சுப்பு ஆறுமுகத்திற்கு தீட்சை வழங்கினார்.
தனி வாழ்க்கை
சுப்பு ஆறுமுகத்தின் மனைவி மகாலட்சுமி. மகள்கள் சுப்புலட்சுமி, பாரதி, மகன் காந்தி. காந்தியும், பாரதியும் வில்லிசைக் கலைஞர்கள்.
கலை வாழ்க்கை
சுப்பையா பிள்ளை, நவநீத கிருஷ்ணன் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டை முறையாகப் பயின்றார். சென்னைக்கு அழைத்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் சுப்பு ஆறுமுகத்தை தனது வீட்டில் தங்க வைத்தார். கலைவாணர் கம்பெனியில் வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத வைத்தார். உடுமலை நாராயண கவியார், கே.பி.காமாட்சி ஆகியோருடன் இணாஇந்து எழுத்துப்பணியாற்றினார்.
காந்திமகான் கதையை, என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் சுப்பு ஆறுமுகத்தைக் கொண்டு எழுதச் சொல்லி பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார். 1948-ம் ஆண்டு ‘காந்தி மகான்’ என்ற கதையை எழுதினார். அந்தக் கதையை வில்லுப்பாட்டாகவும் நடத்தினார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி "கருணைக்கடல் காஞ்சி காமாட்சி" என்ற தலைப்பில் அரங்கேறியது. காஞ்சிப் பெரியவர் நல்லாசியுடன் ஆலயங்களில் தெய்வீகம், தமிழ்ச்சங்களில் வில்லுப்பாட்டு பாடினார். "காந்தி வந்தார்" என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். 1975 முதல் தூர்தர்ஷனில் வில்லிசை பாடினார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி அரங்கேற்றினார்.
வில்லுப்பாட்டு
கலைவாணர்ன் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் நாடெங்கும் முதல் பணியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தினார். சுடலைமாடன், இசக்கியம்மன், முத்தாரம்மன் கோவில்களில் கொடை பாடினார். பாடல் முறைகள், பாடல் பிரதி உருவாக்கம், சமூக விழிப்புணர்வு சார்ந்த கருக்கள் கொண்ட பாடல் ஆகியவற்றில் புதுமை செய்து வில்லிசைக்கலையை நவீனப்படுத்தினார்.
ராமாயணம், மகாபாரதம், அரசியல்-சமூக பிரச்சனைகளையும் வில்லுப்பாட்டில் பாடினார். மெல்லிய பகடியுடன் கூடிய இசை இவருடைய வில்லிசைப்பாடல்களில் இருந்தன. திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத தமிழில் பாடினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தியாகபிரம்மத்தின் 145வது ஆண்டு நிகழ்ச்சி முதல் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேர வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் நடத்தினார். ‘நாதத்தில் பேதமில்லை’ என்ற தலைப்பில் திருவையாறு மகோற்சவத்தில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார்.இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்தார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் ஒலிநாடாக்களாகவும், குறுந்தகடுகளாகவும் வெளிவந்தன.
திரை வாழ்க்கை
கலைவாணரின் பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதினார். இவர் எழுதிய ’சின்னஞ்சிறு உலகம்’ திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
சுப்பு ஆறுமுகம் தன் பதினாறு வயதில் பாரதியார் மீது கொண்ட பற்று காரணமாக அவரின் கண்ணன் பாட்டு சாயலில் "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. வில்லுப்பாட்டை மையமாகக் கொண்டு பதினைந்து நூல்களை எழுதினார். 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்ற நாடகம் இவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிட்டது. மனிதர்கள் ஜாக்கிரதை நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்ற வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு இருந்தது. 85 வயதோடு, வில்லுப்பாட்டு மேடைக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, முழுவதுமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். தொடங்கினேன். ‘திருக்குறள் அனுபவ உரை’ என்ற நூலை எழுதினார்.
பதிப்பகம்
சுப்பு ஆறுமுகம் மகம் பதிப்பகத்தை ஆரம்பித்தார். ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற நூலையும், ‘வில்லிசையில் சமுதாயப் பாடல்கள்’ என்ற நூலையும் வெளியிட்டேன்.
விருதுகள்
- 1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருது
- 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
- 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது
- 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது
- தமிழக அரசால் "கலைமாமணி"
- இந்து தமிழ் திசை நாளிதழின் ‘தமிழ் திரு விருது’
மறைவு
சென்னை கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் தனது மகளுடன் வசித்து வந்த சுப்பு ஆறுமுகம் தனது 94வது வயதில் அக்டோபர் 10, 2022-ல் சென்னையில் வயது முதிர்வு காரணமாக காலமானார். நெசப்பாக்கம் மின் மயானத்தில் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இவரைப்பற்றிய நூல்
- மனைவி மகாலட்சுமி சுப்பு ஆறுமுகத்தின் வாழ்க்கையைப் பற்றி ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற பெயரில் வெளியிட்டார்.
நூல்கள் பட்டியல்
- வில்லிசை மகாபாரதம்
- வில்லிசை இராமாயணம்
- நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- நூலக வில்லிசை
- திருக்குறள் அனுபவ உரை
உசாத்துணை
- வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்: தினமணி
- வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார் : இந்து தமிழ் திசை
- நான் சுப்பு ஆறுமுகம்(வில்லிசை வேந்தர்): குங்குமம்: ஷாலினி நியூட்டன்
- Villupaattu exponent Subbu Arumugam: the hindu
- வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: விகடன்
- இதிகாசங்களை பாமரனுக்கு கொண்டு சேர்த்தது வில்லுபாட்டு: thirukkannapurathaan