வ. கணபதிப்பிள்ளை (புலோலியூர்): Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 24: | Line 24: | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
{{ready for review}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 09:58, 11 October 2022
வ. கணபதிப்பிள்ளை (புலோலியூர்) (1845-1894) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
வ. கணபதிப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பருத்தித்துறை புலோலியூரில், வல்லிபுரநாத பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். இளமைக் காலத்தில் புலோலியில் அமைந்திருந்த பாடசாலையில் கல்வி கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்திலே கற்றார். சென்னைக்குச் சென்று ஆங்கிலமும் சமஸ்கிருதமும் பயின்றார். பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார். புலோலி, வ. குமாரசுவாமிப் புலவர் இவருடைய தம்பி. தங்கை பார்வதி.
ஆசிரியப்பணி
வ. கணபதிப்பிள்ளை காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பண்டிதராக பணியாற்றினார். திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் பிரதம ஆசிரியராகவும் பணி யாற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலம் சென்னைத் 'திராவிட வர்த்தனிச் சங்கத்தின் பண்டிதராகவும் விளங் கினர்.
மாணவர்கள்
- மொழிநூல் ஆசிரியரான மாகறல் கார்த்திகேய முதலியார்
- பூரீநிவாசாசாரிய சுவாமிகள் (சமக்கிருத வித்துவ சிரோமணி)
இலக்கிய வாழ்க்கை
வில்ஹணியம், வாதபுரேசர்கதை ஆகிய நூல்களை வட மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
நூல் பட்டியல்
மொழிபெயர்ப்பு
- வில்ஹணியம்
- வாதபுரேசர்கதை
- இரகுவம்ச மொழிபெயர்ப்பு
பிற
- இரகுவம்ச சுருக்கம்
- வேதாரணியேசுவரர் ஊஞ்சற் பதிகம்
- இந்திரசேன நாடகம்
- மார்க்கண்டேய புராணம்
- பதப்பிரயோக விவரணம்
- தருக்கசாஸ்திர வினாவிடை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.