எம்.கோவிந்தன்: Difference between revisions
Line 10: | Line 10: | ||
எம்.கோவிந்தன் 1944 ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் செய்தித் தொடர்புத்துறையில் ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் இருந்து ''சண்டே அப்சர்வர்'' என்னும் இதழை நடத்திவந்த ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரான பி.பாலசுப்ரமணிய முதலியார் அப்பதவியை அவருக்கு வாங்கித்தந்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக ஆனபின்னரும் அப்பதவியில் தொடர்ந்தார். 1958ல் பதவிவை உதறினார். | எம்.கோவிந்தன் 1944 ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் செய்தித் தொடர்புத்துறையில் ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் இருந்து ''சண்டே அப்சர்வர்'' என்னும் இதழை நடத்திவந்த ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரான பி.பாலசுப்ரமணிய முதலியார் அப்பதவியை அவருக்கு வாங்கித்தந்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக ஆனபின்னரும் அப்பதவியில் தொடர்ந்தார். 1958ல் பதவிவை உதறினார். | ||
எம்.கோவிந்தனின் மனைவி கே.சி. பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். புகழ்பெற்ற ஓவியரான கே.சி.எஸ்.பணிக்கரின் மருமகள். பத்மாவதியம்மா இலக்கிய ஆர்வம் கொண்டவர். வில்லியம் சரோயனின் | எம்.கோவிந்தனின் மனைவி கே.சி. பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். புகழ்பெற்ற ஓவியரான கே.சி.எஸ்.பணிக்கரின் மருமகள். பத்மாவதியம்மா இலக்கிய ஆர்வம் கொண்டவர். வில்லியம் சரோயனின் ''The Human Comedy'' நாவலையும், ஐசக் பாஷவிஸ் சிங்கர் கதைகளையும் மொழியாக்கம் செய்தவர். அரசியல் போராளியும்கூட. கல்விநாட்களில் குருவாயூர் ஆலயநுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். | ||
எம்.கோவிந்தனின் மகன் ஜி. மானவேந்திரநாத் நாடக நடிகர். சி.முத்துசாமியின் கூத்துப்பட்டறை நாடகமன்றத்துடன் தொடர்புகொண்டு நடித்திருக்கிறார். எம்.கோவிந்தன் அவருடைய மகளின் திருமணம் முடிந்த மறுநாள் மறைந்தார். | |||
== அரசியல் == | == அரசியல் == | ||
எம்.கோவிந்தன் தன் உறவினரான இடசேரி கோவிந்தன் நாயர் அளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ’சோஷலிசம் எதற்காக?’ என்னும் நூல் வழியாக சோஷலிச இயக்கம் மீது ஆர்வம் கொண்டார். | எம்.கோவிந்தன் தன் உறவினரான இடசேரி கோவிந்தன் நாயர் அளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ’சோஷலிசம் எதற்காக?’ என்னும் நூல் வழியாக சோஷலிச இயக்கம் மீது ஆர்வம் கொண்டார். சென்னையில் அவர் முறையான கல்வி கற்கவில்லை என்றாலும் அரசியல் நூல்களை தொடர்ந்து படித்துவந்தார்.இந்திய தேசியகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி இதழ்களான ராஜ்யாபிமானி, தொழிலாளி இதழ்களில் அவருடைய கட்டுரைகள் வந்தன | ||
எம்.கோவிந்தன் | ====== எம்.என்.ராய் ====== | ||
எம். கோவிந்தன் 1939 ல் எம்.என் ராய் நடத்திவந்த இண்டிபெண்டண்ட் இந்தியா ( Independent India) இதழில் எம்.கோவிந்தனின் கட்டுரை தென்னிந்தியாவில் சாதியும் வர்க்கமும் ( Caste and Class in South India) பிரசுரமாகியது. அக்கட்டுரையில் கோவிந்தன் காந்தியின் தேசிய இயக்கத்தை நிராகரித்து, தென்னகத்திற்கு உடனடி தேவை சாதியக்கட்டமைப்புகளை தகர்க்கும் அரசியலே என வாதிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து எம்.என்.ராயுடன் அணுக்கமான உறவு உருவானது. | |||
1940 ல் எம்.என்ராய் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டி (Radical Democratic Party (India) ) வை தொடங்கியபோது அதன் ஆதரவாளரானார். நீதிபதி வி.எம்.தார்குண்டே போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். | 1940 ல் எம்.என்ராய் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டி (Radical Democratic Party (India) ) வை தொடங்கியபோது அதன் ஆதரவாளரானார். நீதிபதி வி.எம்.தார்குண்டே போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். | ||
எம்.என்.ராய் 1948 ல் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டியை கலைத்துவிட்டு ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் இயக்கம் (Radical Humanist movement) எனும் பண்பாட்டு அமைப்பை உருவாக்கியபோது எம்.கோவிந்தன் அதன் தென்மாநிலங்களின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். தென்னகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உட்பட வெவ்வேறு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லாத இயக்கங்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். | எம்.என்.ராய் 1948 ல் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டியை கலைத்துவிட்டு ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் இயக்கம் (Radical Humanist movement) எனும் பண்பாட்டு அமைப்பை உருவாக்கியபோது எம்.கோவிந்தன் அதன் தென்மாநிலங்களின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். தென்னகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உட்பட வெவ்வேறு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லாத இயக்கங்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். | ||
1954ல் எம்.என்.ராய் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்தபின் எம்.கோவிந்தன் | 1954ல் எம்.என்.ராய் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்தபின் எம்.கோவிந்தன் ராடிக்கல் ஹியூமனிஸ்ட் அமைப்பை தனியாகவே தொடர்ச்சியாகந் நடத்திவந்தார். | ||
====== சி.ஜே.தாமஸ் ====== | |||
== சி.ஜே. | எம்.கோவிந்தனும் மலையாள நாடக ஆசிரியர் [[சி. ஜே. தாமஸ்|சி. ஜே. தாமஸும்]] இரட்டையர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அணுக்கமான நட்புடன் இருந்தனர். 1949ல் அவர்கள் இருவரும் சந்தித்தனர். சி.ஜே.தாமஸ் சென்னை பல்கலையில் எம்.லிட் படிக்கச் சென்றபோது அந்த தொடர்பு உருவாகியது. சி.ஜே.தாமஸ் இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்து பின்னர் அவற்றிலிருந்து விலகினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகள் ருஷ்யச்சார்பாக அமைந்துள்ளன என்று குற்றம்சாட்டிய எம்.கோவிந்தனும் சி.ஜே.தாமஸும் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையில் கேரளத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர். | ||
எம்.கோவிந்தனும் மலையாள நாடக ஆசிரியர் [[சி. ஜே. தாமஸ்|சி. ஜே. தாமஸும்]] | |||
1958 ல் எம்.கோவிந்தன் அரசியலில் இருந்து விலகி முழுமையாகவே இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். | |||
== இதழியல் == | == இதழியல் == | ||
எம்.கோவிந்தன் நவசாகிதி, கோபுரம், சமீக்ஷா ஆகிய | எம்.கோவிந்தன் நவசாகிதி, கோபுரம், சமீக்ஷா ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார். சமீக்ஷா கேரளத்தில் நவீன இலக்கியத்தின் அடித்தளத்தை அமைத்த சிற்றிதழாகக் கருதப்படுகிறது | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
== மறைவு == | == மறைவு == | ||
எம்.கோவிந்தன் 23 ஜனவரி 1989 ல் குருவாயூரில் மறைந்தார். | எம்.கோவிந்தன் 23 ஜனவரி 1989 ல் குருவாயூரில் மறைந்தார். |
Revision as of 18:56, 9 October 2022
எம்.கோவிந்தன் (18 செப்டெம்பர் 1919 -- 23 ஜனவரி 1989 ) (மாஞ்சேரத்து தாழத்து கோவிந்தன் நாயர்) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த எம்.கோவிந்தன் பின்னர் எம்.என்.ராய் தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆனார். மலையாளத்தில் நவீனக் கவிதை, நவீன சிறுகதை, நவீன நாவல் உருவாக முன்முயற்சிகள் எடுத்தார்.
பிறப்பு, கல்வி.
எம்.கோவிந்தன் 18 செப்டெம்பர் 1919 ல் கேரளமாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் குற்றிப்புறம் என்னும் ஊரிலுள்ள திருக்கண்ணபுரம் என்னும் பகுதியில் மாஞ்சேரத்து தாழேத்து என்னும் நாயர் இல்லத்தில் தேவகியம்மாவுக்கும் கோயத்துமனைக்கல் சித்ரன் நம்பூதிரிக்கும் பிறந்தார். கோவிந்தனின் அம்மா தேவகி கருணாகரன் நாயர் என்னும் காவல்துறை அதிகாரியை மணந்து சென்னைக்குக் குடியேறியபோது கோவிந்தனும் சென்னைக்குக் குடியேறினார்.
எம்.கோவிந்தன் குற்றிப்புறம் நடுநிலைப்பள்ளியிலும் பின்னர் குற்றிப்புறம் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். சென்னைக்குச் சென்றபின் படிப்பைத் தொடரவில்லை.
தனிவாழ்க்கை
எம்.கோவிந்தன் 1944 ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் செய்தித் தொடர்புத்துறையில் ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் இருந்து சண்டே அப்சர்வர் என்னும் இதழை நடத்திவந்த ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரான பி.பாலசுப்ரமணிய முதலியார் அப்பதவியை அவருக்கு வாங்கித்தந்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக ஆனபின்னரும் அப்பதவியில் தொடர்ந்தார். 1958ல் பதவிவை உதறினார்.
எம்.கோவிந்தனின் மனைவி கே.சி. பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். புகழ்பெற்ற ஓவியரான கே.சி.எஸ்.பணிக்கரின் மருமகள். பத்மாவதியம்மா இலக்கிய ஆர்வம் கொண்டவர். வில்லியம் சரோயனின் The Human Comedy நாவலையும், ஐசக் பாஷவிஸ் சிங்கர் கதைகளையும் மொழியாக்கம் செய்தவர். அரசியல் போராளியும்கூட. கல்விநாட்களில் குருவாயூர் ஆலயநுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
எம்.கோவிந்தனின் மகன் ஜி. மானவேந்திரநாத் நாடக நடிகர். சி.முத்துசாமியின் கூத்துப்பட்டறை நாடகமன்றத்துடன் தொடர்புகொண்டு நடித்திருக்கிறார். எம்.கோவிந்தன் அவருடைய மகளின் திருமணம் முடிந்த மறுநாள் மறைந்தார்.
அரசியல்
எம்.கோவிந்தன் தன் உறவினரான இடசேரி கோவிந்தன் நாயர் அளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ’சோஷலிசம் எதற்காக?’ என்னும் நூல் வழியாக சோஷலிச இயக்கம் மீது ஆர்வம் கொண்டார். சென்னையில் அவர் முறையான கல்வி கற்கவில்லை என்றாலும் அரசியல் நூல்களை தொடர்ந்து படித்துவந்தார்.இந்திய தேசியகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி இதழ்களான ராஜ்யாபிமானி, தொழிலாளி இதழ்களில் அவருடைய கட்டுரைகள் வந்தன
எம்.என்.ராய்
எம். கோவிந்தன் 1939 ல் எம்.என் ராய் நடத்திவந்த இண்டிபெண்டண்ட் இந்தியா ( Independent India) இதழில் எம்.கோவிந்தனின் கட்டுரை தென்னிந்தியாவில் சாதியும் வர்க்கமும் ( Caste and Class in South India) பிரசுரமாகியது. அக்கட்டுரையில் கோவிந்தன் காந்தியின் தேசிய இயக்கத்தை நிராகரித்து, தென்னகத்திற்கு உடனடி தேவை சாதியக்கட்டமைப்புகளை தகர்க்கும் அரசியலே என வாதிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து எம்.என்.ராயுடன் அணுக்கமான உறவு உருவானது. 1940 ல் எம்.என்ராய் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டி (Radical Democratic Party (India) ) வை தொடங்கியபோது அதன் ஆதரவாளரானார். நீதிபதி வி.எம்.தார்குண்டே போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.
எம்.என்.ராய் 1948 ல் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டியை கலைத்துவிட்டு ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் இயக்கம் (Radical Humanist movement) எனும் பண்பாட்டு அமைப்பை உருவாக்கியபோது எம்.கோவிந்தன் அதன் தென்மாநிலங்களின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். தென்னகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உட்பட வெவ்வேறு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லாத இயக்கங்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
1954ல் எம்.என்.ராய் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்தபின் எம்.கோவிந்தன் ராடிக்கல் ஹியூமனிஸ்ட் அமைப்பை தனியாகவே தொடர்ச்சியாகந் நடத்திவந்தார்.
சி.ஜே.தாமஸ்
எம்.கோவிந்தனும் மலையாள நாடக ஆசிரியர் சி. ஜே. தாமஸும் இரட்டையர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அணுக்கமான நட்புடன் இருந்தனர். 1949ல் அவர்கள் இருவரும் சந்தித்தனர். சி.ஜே.தாமஸ் சென்னை பல்கலையில் எம்.லிட் படிக்கச் சென்றபோது அந்த தொடர்பு உருவாகியது. சி.ஜே.தாமஸ் இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்து பின்னர் அவற்றிலிருந்து விலகினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகள் ருஷ்யச்சார்பாக அமைந்துள்ளன என்று குற்றம்சாட்டிய எம்.கோவிந்தனும் சி.ஜே.தாமஸும் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையில் கேரளத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர்.
1958 ல் எம்.கோவிந்தன் அரசியலில் இருந்து விலகி முழுமையாகவே இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இதழியல்
எம்.கோவிந்தன் நவசாகிதி, கோபுரம், சமீக்ஷா ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார். சமீக்ஷா கேரளத்தில் நவீன இலக்கியத்தின் அடித்தளத்தை அமைத்த சிற்றிதழாகக் கருதப்படுகிறது
இலக்கியவாழ்க்கை
மறைவு
எம்.கோவிந்தன் 23 ஜனவரி 1989 ல் குருவாயூரில் மறைந்தார்.
நினைவுகள்
இலக்கிய இடம்
நூல்கள்
கவிதைகள்
- ஒரு பொன்னானிக்காரன்றே மனோராஜ்யம்
- நாட்டுவெளிச்சம்
- கோவிந்தன் கவித
- அரங்கேற்றம்
- மேனகா
- நோக்குகுத்தி
- மாமாங்கம்
- ஞானஸ்நானம்
- ஒரு கூடியாட்டத்தின்றே கத
- தொடர்க்கணி
நாடகம்
- நீ மனுஷ்யனே கொல்லருது
- செகுத்தானும் மனுஷ்யரும்
- ஓஸ்யத்து
கதைகள்
- மணியார்டரும் பிற கதைகளும்
- சர்ப்பம்
- ராணியுடே பட்டி
- பஷீரின்றே புன்னார மூஷிகன்
மொழியாக்கம்
- விவேகமில்லெங்கில் விநாசம்
- இனி இவிடேநிந்நு எங்ஙோட்டு?
கட்டுரைகள்
- பூணூலிட்ட டெமாக்ரஸி
- ஜனாதிபத்யம் நம்முடே நாட்டில்
- புதிய மனுஷ்யன் புதிய லோகம்