செ. இராசநாயகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "செ. இராசநாயகம் (அக்டோபர் 22, 1870 - ஜனவரி 17, 1940) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர். == வாழ்க்கைக் குறிப்பு == செ. இராசநாயகம் அக்டோபர் 22, 1870-ல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உட...")
 
Line 1: Line 1:
செ. இராசநாயகம் (அக்டோபர் 22, 1870 - ஜனவரி 17, 1940) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்.
செ. இராசநாயகம் (அக்டோபர் 22, 1870 - ஜனவரி 17, 1940) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, கல்வி ==
செ. இராசநாயகம் அக்டோபர் 22, 1870-ல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்றார். தனது 19 ஆவது வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். 1920ல் பதவி உயர்வு கிடைத்தது. 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் அனுமதிக்கப்பட்டார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணி புரிந்த இராசநாயகம் 1929-ல் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.  
செ. இராசநாயகம் அக்டோபர் 22, 1870-ல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
செ. இராசநாயகம் 1889-ல் வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். 1920ல் உயர்நீதிமன்றத்தில் மூன்றம் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் அனுமதிக்கப்பட்டார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணி புரிந்த இராசநாயகம் 1929-ல் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.
 
== ஆய்வுப்பணிகள் ==
== ஆய்வுப்பணிகள் ==
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார். பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்து அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டார். Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். தென்னிந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் Ancient Jaffna என்னும் நூலுக்கு அணிந்துரை எழுதினார்.  
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார். பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்து அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டார். Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். தென்னிந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் Ancient Jaffna என்னும் நூலுக்கு அணிந்துரை எழுதினார்.  

Revision as of 08:28, 5 October 2022

செ. இராசநாயகம் (அக்டோபர் 22, 1870 - ஜனவரி 17, 1940) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்.

பிறப்பு, கல்வி

செ. இராசநாயகம் அக்டோபர் 22, 1870-ல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

செ. இராசநாயகம் 1889-ல் வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். 1920ல் உயர்நீதிமன்றத்தில் மூன்றம் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் அனுமதிக்கப்பட்டார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணி புரிந்த இராசநாயகம் 1929-ல் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

ஆய்வுப்பணிகள்

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார். பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்து அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டார். Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். தென்னிந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் Ancient Jaffna என்னும் நூலுக்கு அணிந்துரை எழுதினார்.

இலக்கிய இடம்

”இத்தகைய ஆய்வுகளில் பயிற்சியும் அனுபவமும் இல்லாத இராசநாயகத்தின் இந்த நூலில் இருந்து அதிகம் எதிர்பார்த்திருக்கவில்லை” என கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிடுகிறார். இந்த நூலில் பெருமளவு உழைப்பும், விரிவான ஆய்வும் உள்ளடங்கி இருப்பதாகவும், அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வெளியே தெரியாத பெருமளவு விடயங்களை நூல் உள்ளடக்கி இருப்பதாகவும் எழுதியுள்ள அவர், இந்நூலில் பதியப்படாமல் இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான தகவல்கள் அழிந்து போயிருக்கக்கூடியவை என்றும் கூறியுள்ளதானது, யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இராசநாயகத்தின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இறுதியாக, யாழ்ப்பாண வரலாற்றுக்கு மட்டுமன்றி, இந்திய வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இந்நூல் பயனுள்ளது என்ற கருத்தையும் கிருஷ்ணசுவாமி இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

பண்டைய யாழ்ப்பாணம் என்னும் யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்றார். யாழ்ப்பாண வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரே ஆய்வு நூலாக இது விளங்கியது. வேறு சில நூல்களையும் இவர் எழுதினார்.

யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகியவற்றைத் தேடி இலண்டன் அருங்காட்சியக ஆவணக் காப்பகத்துக்குச் சென்ற இராசநாயகம், அங்கிருந்த அவற்றின் படிகளைப் பெற்று வந்தார். அவற்றில், கைலாயமாலையைத் தனது குறிப்புக்களுடன் பதிப்பித்து வெளியிட்டார். இவை தவிர இராசநாயகம் எழுதிய "கதிர்காமம்" குறித்த ஒரு நூலும் 1930-ல் வெளியானது. 1934ல், பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் நூலொன்றையும் அவர் வெளியிட்டார். அத்தோடு ஆவணக் காப்பகத்தில் இருந்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக 1937ல் வெளியிட்டுள்ளார். இறுதிக் காலத்தில் நூற்பெயர் அகராதி என்ற நூலுக்காக 30,000 தமிழ்ப் புத்தகங்களின் பெயர்களைத் தொகுத்து அந்தாதி, வெண்பா, சரித்திரம், சமயம் எனப் பலவாறு வகைப்படுத்தித் தொகுத்துள்ளார்.

சரித்திர ஆராய்ச்சிக் கழகத்தின் உறுப்பினராயிருந்து பழைய இலங்கை மன்னர்களின் தமிழ்க் கடிதங்களைத் தொகுத்து செப்பனிட்டு அரசாங்கத்தாரைக் கொண்டு வெளியிட்டார். 1878ல் எஸ். ஜோன் என்பவர் எழுதி வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் தமிழ் நூலை மீள்பதிப்புச் செய்யும்படி ஜோனின் மகனுக்கு ஊக்கம் கொடுத்தார். அத்துடன், யாழ்ப்பாண வைபவமாலையைக் குறிப்புக்களுடன் பதிப்பிக்குமாறு குல. சபாநாதனையும் இவர் கேட்டுக்கொண்டார்.

மறைவு

செ. இராசநாயகம் ஜனவரி 17, 1940-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • யாழ்ப்பாணச் சரித்திரம்
  • கதிர்காமம்
  • யாழ்ப்பாணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

இணைப்புகள்

  • யாழ்ப்பாண சரித்திரம்: செ. இராசநாயகம்